செய்திகள் :

ஐபிஓவை வெளியிட கிரிசாக் நிறுவனத்திற்கு செபி ஒப்புதல்!

post image

புதுதில்லி: மாணவர் ஆட்சேர்ப்பு தீர்வு நிறுவனமான, 'கிரிசாக்' நிறுவனம், ஐ.பி.ஓ. வாயிலாக ரூ.1,000 கோடி திரட்ட, செபியின் ஒப்புதலை பெற்றுள்ளது.

முன்மொழியப்பட்ட ஐபிஓ மூலம், பிங்கி அகர்வால் மற்றும் மனிஷ் அகர்வால் முறையே ரூ.841 கோடி மற்றும் ரூ.159 கோடி மதிப்புள்ள பங்கு பங்குகளை விற்க திட்டமிட்டனர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தனது ஆவணங்களை செபி-யிடம் அனுப்பிய நிலையில், ஒழுங்குமுறை ஆணையம் ஜூலை மாதத்தில் திருப்பி அனுப்பியது.

இதையடுத்து, நவம்பரில் ஆவணங்களை மீண்டும் தாக்கல் செய்து, ஆரம்ப பங்கு விற்பனையை தொடங்க அனுமதி கோரியது. இதன் அடிப்படையில், மார்ச் 4, 2025 அன்று செபி அனுமதி கடிதத்தை வழங்கியது.

கொல்கத்தாவைத் தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் இங்கிலாந்து, கனடா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள உலகளாவிய உயர்கல்வி நிறுவனங்களுக்கு, ஆட்சேர்ப்பு தீர்வுகளை வழங்கும் வழங்குநராக உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், கிரிசாக் அதன் தொழில்நுட்ப தளத்தில் பதிவுசெய்யப்பட்ட முகவர்கள் மூலம் 72 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்களை நடைமுறைப்படுத்தியது. 140 க்கும் மேற்பட்ட உலகளாவிய பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைத்துள்ள நிலையில், கிரிசாக் இதுவரை மிகுந்த கவனத்துடன் 3.82 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர் விண்ணப்பங்களை பரிசீலனை செய்துள்ளது.

2023ஆம் நிதியாண்டில் அதன் செயல்பாடுகளிலிருந்து ஒருங்கிணைந்த வருவாய், அதன் முந்தைய ஆண்டு ரூ.263.53 கோடியிலிருந்து 79.5 சதவிகிதம் உயர்ந்து ரூ.472.97 கோடியாக உள்ளது.

வரிக்கு பிந்தைய லாபமாக ரூ.67.76 கோடியிலிருந்து 65.50 சதவிகிதம் அதிகரித்து ரூ.112.14 கோடியாக உள்ளதாக தெரிவித்தது.

இதையும் படிக்க: இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.87.21 ஆக முடிவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.87.19 ஆக முடிவு!

மும்பை: கட்டண நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.87.19 ஆக முடிவடைந்தது.கச்சா எண்ணெய் விலை ஏற்றம், உள்நாட்டு பங்குகள் தொடர்ந்து விற்... மேலும் பார்க்க

ஆரம்பத்தில் உயர்ந்தும், முடிவில் சரிந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், இன்றைய வர்த்த தொடக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்த நிலையில், வர்த்தக கட்டணங்கள் குறித்த உலகளாவிய போக்குகள் காரணமாக முடிவில் நேற்றைய அமர்வை விட சர... மேலும் பார்க்க

டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி! ஒரே நாளில் எலானுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு?

அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் கடும் சரிவைச் சந்தித்தன. இதனால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சரிந்துள்ளது.அமெரிக்கத் தொழிலதிபருக்குச் சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் மதிப்... மேலும் பார்க்க

எலான் மஸ்க் நிறுவனத்துடன் ஜியோ ஒப்பந்தம்!

ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து, ஜியோ நிறுவனமும் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளது.அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள், ... மேலும் பார்க்க

டெலாய்ட் விருது பெற்ற 9 தமிழக நிறுவனங்கள்

பிரிட்டனைச் சோ்ந்த சா்வதேச சேவை நிறுவனங்களின் வலைக்கூட்டமைப்பான டெலாய்ட், அண்மையில் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகச் சிறந்த வளா்ச்சி பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் ஒன... மேலும் பார்க்க

8% குறைந்த சமையல் எண்ணெய் இறக்குமதி

இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் குறைந்துள்ளது. இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க