செய்திகள் :

ஐபோனுக்கு போட்டியாக ஒன்பிளஸ் 15..! விலை, வெளியீடு, சிறப்பம்சங்கள் என்ன?

post image

கேமிராவுக்கு என புகழ்ப்பெற்ற ஒன்பிளஸ் நிறுவனத்தின் 'ஒன்பிளஸ் 15’ என்ற புதிய ஸ்மார்ட்போன் ஐபோனுக்கு போட்டியாக அறிமுகமாகவிருக்கிறது.

இந்தப் புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்கள் சமூக வலைதளத்தில் பேசுபொருளை உருவாக்கியுள்ளது.

சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒன்பிளஸ் நிறுவனம், இந்திய பிரீமியம் பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை வழங்கி வருகிறது.

அந்தவகையில், புதிதாக ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வருகை, பயனர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்பிளஸ் 15 சிறப்பம்சங்கள்

திரை: 6.78 அங்குலம் கொண்ட எல்டிபிஓ திரை

ரிப்ரஸ் ரேட்: 165ஹெர்ட்ஜ் கொண்ட புதுப்பிக்கும் வீதம்

புராசஸர்: ஸ்நாப்டிராகன் 8 எலைட் ஜென் 5

காமிரா: 50மெகா பிக்சல் - முதன்மை காமிரா, 50 மெகா பிக்சல் அல்ட்ரா வைட், 50 மெகா பிக்சல் உடன் 3 ஜூம் பெரிஸ்கோப்.

பேட்டரி: 7300 மில்லி ஆம்பியர் கொண்ட பேட்டரி

சார்ஜர்: 120 வாட்ஸ் வயர் சார்ஜர், 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜர்.

மழை, தூசி புகா திறன்: ஐபி 68 மற்றும் ஐபி 69 வசதிகள்.

வெளியாவது எப்போது?

இந்த ஸ்மார்ட்போன் வரும் அக்டோபரில் சீனாவில் வெளியாக இருக்கிறது.

இந்தியாவில் இந்த வகை ஸ்மார்ட்போன் வரும் ஜனவரியில் வெளியாகலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் வெளியான பிறகுதான் இதன் முழுமையான சிறப்பம்சங்களும் வெளியாகுமெனக் கூறப்படுகிறது.

விலை எவ்வளவு?

இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 70ஆயிரம் வரை இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதே விலையில் இருக்கும் ஆப்பிள் 15 ஸ்மார்ட்போனைவிட நல்ல சிறப்பம்சங்களுடன் இருப்பதால், இந்த ஒன்பிளஸ் 15 அதிகமாக விற்பனையாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus, known for its camera, is set to launch a new smartphone called the 'OnePlus 15' to compete with the iPhone.

அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்து: கிரிசில்

கொல்கத்தா: இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள அதித வரி நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று கிரெடிட் ரேட்டிங் இன்ஃபர்மேஷன் சர்வீசஸ் ஆஃப் இந்தியா லிமிடெட் (கிரிசில்) தனது செ... மேலும் பார்க்க

ஈவுத்தொகையாக ரூ.3,248 கோடி அரசுக்கு செலுத்திய என்டிபிசி!

புதுதில்லி: அரசுக்கு சொந்தமான என்டிபிசி நிறுவனமானது 2024-25 நிதியாண்டிற்கான இறுதி ஈவுத்தொகையான ரூ.3,248 கோடியை அதன் நிர்வாக மின் அமைச்சகத்திற்கு வழங்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.இதுகுறித்து நிறுவனம் மேல... மேலும் பார்க்க

வாரீ எனர்ஜிஸ் பங்குகள் 7% சரிவு!

புதுதில்லி: சூரிய சக்தி தகடுகள் இறக்குமதி மீதான வரி ஏய்ப்பு தொடர்பாக அமெரிக்க நிறுவனம் மீது விசாரணை நடத்தி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, உள்ளூர் வர்த்தகத்தில் வாரீ எனர்ஜிஸின் பங்குகள் கிட்டத்... மேலும் பார்க்க

வோடபோன் ஐடியா பங்குகள் 8% சரிவுடன் நிறைவு!

புதுதில்லி: 2016-17 வரையிலான காலகட்டத்திற்கான கூடுதல் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் கோரிக்கைகளை ரத்து செய்யக் கோரிய நிறுவனத்தின் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததை... மேலும் பார்க்க

முத்தூட் ஃபின்கார்ப் நிறுவனத்துக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!

மும்பை: வங்கி வாடிக்கையாளர்களின் புகார்களை விசாரித்து விரைவாக தீர்வு காண்பதற்கான சில விதிமுறைகளை பின்பற்றாத முத்தூட் ஃபின்கார்ப் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.2.7 லட்சம் அபராதம் விதித்துள்ளது இந்திய ரிசர... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து ரூ.88.72ஆக நிறைவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதன் வரலாறு காணாத குறைந்த அளவிலிருந்து 4 காசுகள் உயர்ந்து ரூ.88.72 ஆக முடிவடைந்தது.இந்திய-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் திருப்புமுனை ஏற... மேலும் பார்க்க