செய்திகள் :

ஐ.நா.வில் ஹிந்தி திட்டம்: ஒப்பந்தம் புதுப்பிப்பு

post image

நியூயாா்க் : ஐ.நா. சபையிலிருந்து செய்திகள் மற்றும் பிற பொது நிகழ்வுகளை ஹிந்தி மொழியில் ஒளிபரப்பு செய்யும் திட்டத்தை புதுப்பிப்பது தொடா்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியா இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

‘ஐ.நா.வில் ஹிந்தி’ என்ற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2030 மாா்ச் 31-ஆம் தேதி வரையிலான 5 ஆண்டு கால திட்ட புதுப்புக்கான இந்த ஒப்பந்தத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பி.ஹரீஷ் மற்றும் ஐ.நா. சா்வதேச தகவல் தொடா்பு துறை செயலா் மெலிஸா ஃபிளெமிங் ஆகியோா் கையொப்பமிட்டனா்.

இந்தத் திட்டத்துக்காக இதுவரை ரூ. 60 கோடி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆண்டுக்கு ரூ. 13.10 கோடி (1.3 மில்லியன் டாலா்) வீதம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு வழங்க இந்தியா உறுதியேற்றுள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய ஹரீஷ், ‘ஐ.நா.வில் அதிகாரபூா்வ மொழியாக அல்லாத ஹிந்திக்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் மத்திய அரசின் முயற்சியை இந்த புரிந்துணா்வ ஒப்பந்தம் காட்டுகிறது’ என்றாா்.

முன்னதாக, ஹிந்தி பேசும் மக்களிடையே சா்வதேச நிகழ்வுகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் நேக்கில், ஐ.நா. செய்தியை ஹிந்தி மொழியில் ஒளிபரப்புவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு இந்தியா - ஐ.நா. சா்வதேச தகவல் தொடா்பு துறை இடையே கடந்த 2018-ஆம் ஆண்டு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா கொடூரம்: நடந்தது என்ன? சிறுவன் வாக்குமூலம்!

கொல்கத்தாவில், சகோதரர்களின் மனைவிகள் மற்றும் ஒரு மகள் மரணமடைந்து, சகோதரர்கள் மற்றும் ஒரு மகன் விபத்தில் படுகாயமடைந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக, சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.14 வயது பிரதீப் தே... மேலும் பார்க்க

மணிப்பூர்: ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிப்பு!

மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் ஆளுநர் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் கடந்த பிப். 13 முதல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது. இங்கு கலவரம் மற்று... மேலும் பார்க்க

பெங்களூரு விமான நிலையத்தில் காவலரை தாக்கிய வெளிநாட்டவர் கைது!

பெங்களூரு விமான நிலையத்தில் மத்திய தொழில்படையைச் சேர்ந்த வீரரை தாக்கிய வெளிநாட்டுப் பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், அவரை விமானத்தில் செல... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலிருந்து வந்த மிரட்டல்... மகாராஷ்டிர முதல்வரின் பாதுகாப்பு அதிகரிப்பு!

மகாராஷ்டிர முதல்வருக்கு பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து மிரட்டல் செய்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்த ... மேலும் பார்க்க

நகைக் கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி! ரிசர்வ் வங்கியின் புதிய விதி!!

நகைக் கடன் வாங்கியவர்கள், அதற்கான அவகாசம் முடிந்ததும் அதனை வட்டி மட்டும் கட்டி மறு அடமானம் வைப்பதை ரிசர்வ் வங்கி தடை செய்துவிட்டது.பொதுவாக வங்கிகளில் நகையை அடமானமாக வைத்து பணம் வாங்குவதுதான் நகைக்கடன்... மேலும் பார்க்க

தில்லி சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்த கூட்டத்தில் ரேகா குப்தா பங்கேற்பு!

உள்துறை அமைச்சகத்தின் வடக்கு தொகுதி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகத் தில்லி முதல்வர் ரேகா குப்தா வருகை தந்துள்ளார். தேசிய தலைநகரில் சட்டம் ஒழுங்கு நிலைமையை மறு ஆய்வு செய்வதற்காக ... மேலும் பார்க்க