செய்திகள் :

ஒருநாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு: எல்&டி நிறுவனம் அறிவிப்பு!

post image

பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் ஒருநாள் மாதவிடாய் விடுப்பு வழங்கவிருப்பதாக எல்&டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.

லார்சன் & டூப்ரோ நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் ஒருநாள் ஊதியத்துடன் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படவிருப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.

இருப்பினும், அதன் துணை நிறுவனங்களின் நிதி மற்றும் தொழில்நுட்பத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கப்படவில்லை. இந்நிறுவனத்தில் சுமார் 60,000 ஊழியர்களில் 5,000 பெண் ஊழியர்கள் (9%) உள்ளனர்.

இதையும் படிக்க:ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்வு!

ஸ்விக்கி, சொமாட்டோ நிறுவனங்களும் மாதவிடாய் விடுப்பு அறிவித்தபோதும், பெரும்பான்மையான பிற பெரிய நிறுவனங்கள் இதனைப் பின்பற்றவில்லை.

வாரத்துக்கு 90 மணிநேரம் உழைக்க வேண்டும் என்றும், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வளவு நேரம்தான் மனைவியைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்றும் எல்&டி தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் சமீபத்தில் கூறியது சமூக ஊடகங்களில் விமர்சனங்களுக்கு ஆளாகியது.

மணிப்பூரில் காலவரையற்ற வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மணிப்பூரில் குகி மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குகி மக்கள் அதிகம் உள்ள பகுதிகள... மேலும் பார்க்க

3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!

இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் 3-ஆவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த தம்பதிக்கு ரூ.50,000 வெகுமதி வழங்குவேன் என்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் ஆந்திர பிரதேச எம்.பி. அப்பாலநாயுடு. ஆந்திர பிர... மேலும் பார்க்க

ராகுலின் உதவியால் தொழிலதிபராகும் செருப்புத் தைக்கும் தொழிலாளி!

ராகுல் காந்தியின் உதவியால் புதிய காலணி பிராண்டைத் தொடங்கவுள்ள செருப்புத் தைக்கும் தொழிலாளியை பலரும் பாராட்டி வருகின்றனர்.அவதூறு வழக்கு தொடர்பாக, உத்தரப் பிரதேசம் சென்ற ராகுல் காந்தி, தனது ஷூவைத் தைப்ப... மேலும் பார்க்க

பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம்: ரேகா குப்தா!

பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம் என்றும் அது வெற்றிக்கு அப்பாற்பட்டது எனவும் தில்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். சர்வதேச பெண்கள் நாளையொட்டி பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய 7 பெண்கள் தில... மேலும் பார்க்க

பிகார் அரசு பள்ளிகளில் புதிதாக 51,389 ஆசிரியர்கள் நியமனம்!

பிகார் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனத்தின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,389 ஆசிரியர்களுக்கு, முதல்வர் நிதீஷ் குமார் இன்று நியமனக் கட... மேலும் பார்க்க

உ.பி.யில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர் பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் ஹிந்தி பத்திரிகை ஒன்றில் செய்தியாளராகப் பணியாற்றிய ராகவேந்திரா... மேலும் பார்க்க