செய்திகள் :

ஒருநாள் போட்டிகளில் இருந்து முஷ்ஃபிகுர் ரஹிம் ஓய்வு!

post image

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முஷ்ஃபிகுர் ரஹிம் அறிவித்துள்ளார்.

ஏற்கெனவே சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற ரஹிம், தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளார்.

வங்கதேச அணியின் விக்கெட் கீப்பரும் பேட்டருமான 37 வயதான முஷ்ஃபிகுர் ரஹிம், 274 சர்வதேச போட்டிகளில் விளையாடி 7,795 ரன்கள் குவித்துள்ளார். 9 சதங்கள், 49 அரைசதங்கள் அடங்கும்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய வங்கதேச அணியில் இடம்பெற்றிருந்த ரஹிம், இந்தியாவுக்கு எதிராக முதல் பந்தில் டக்-அவுட்டாகியும், நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

வங்கதேச அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நிலையில், தனது ஓய்வு முடிவை ரஹிம் அறிவித்துள்ளார்.

இதையும் படிக்க : ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஆஸி. ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு

ஓய்வு குறித்து ரஹிம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

”ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து இன்றுமுதல் நான் ஓய்வை அறிவிக்கிறேன். கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச அளவில் எங்களின் சாதனை குறிப்பிட்ட அளவிலானது என்றாலும், நான் எப்போதெல்லாம் களமிறங்கினேனோ அப்போதெல்லாம் நூறு சதவிகிதத்தை கொடுத்துள்ளேன்.

கடைசி சில வாரங்கள் சவாலானதாக இருந்தது. இதுதான் எனது முடிவு என்பதை உணர்ந்தேன். எனது நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

வங்கதேச அணிக்காக ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் ரஹிம். இன்னும் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால், வங்கதேசத்துக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.

உலகக்கோப்பைக்கு முன் முத்தரப்பு தொடரில் விளையாடும் இந்திய மகளிரணி!

மகளிர் உலகக் கோப்பைக்கு முன்னதாக இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய மகளிரணி விளையாடவிருக்கிறது.இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் வருகிற ... மேலும் பார்க்க

இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்குதான் எனது ஆதரவு! -மில்லர்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நான் நியூசிலாந்து அணிக்குதான் ஆதரவு அளிப்பேன் என்று தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரையிறுதியில் தென்னா... மேலும் பார்க்க

நான் இதுவரை கண்டிராத சிறந்த சேஸர் விராட் கோலி! -ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்

நான் இதுவரை கண்டிராத சிறந்த சேஸர் விராட் கோலி என்று ஸ்டீவ் ஸ்மித் புகழாரம் சூட்டியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 4 விக்கெட் வித்தியாசத்தில் தோ... மேலும் பார்க்க

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பிரைடன் கார்ஸுக்கு பதிலாக முல்டர் சேர்ப்பு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பிரைடன் கார்ஸுக்கு பதிலாக வியான் முல்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட 10 அணிகள் மோதும் 18-வது ஐபிஎல் தொடர் வருகிற ... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ‘கோல்டன் பேட்’ விருதை வெல்லப் போவது யார்?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்தவருக்கான ‘கோல்டன் பேட்’-ஐ வெல்லப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெற்றுவந்த 9-வது ச... மேலும் பார்க்க

நியூஸி. இறுதிப்போட்டிக்கு தகுதி! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது!

துபை : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் பார்க்க