செய்திகள் :

ஒருவரைத் திட்டுவது தற்கொலைக்குத் தூண்டும் செயலாகாது: உச்சநீதிமன்றம்

post image

ஒருவரைத் திட்டுவது தற்கொலைக்குத் தூண்டும் செயலாகாது எனக் கூறி மாணவா் ஒருவா் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பள்ளியின் பொறுப்பாளரை உச்சநீதிமன்றம் விடுவித்தது.

முன்னதாக, பள்ளி மற்றும் விடுதியின் பொறுப்பாளா் திட்டியதால் விடுதி அறையில் மாணவா் தற்கொலை செய்துகொண்டதாக சக மாணவா் ஒருவா் புகாரளித்தாா். அதனடிப்படையில் பள்ளிப் பொறுப்பாளா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.

மேலும், தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 306-இன்கீழ் கைது செய்யப்பட்ட பள்ளியின் பொறுப்பாளரை விடுவிக்க மறுத்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் பிரசாந்த்குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: தான் திட்டியதால் மாணவா் தற்கொலை செய்துகொள்வாா் என்று ஒருபோதும் எண்ணவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டவா் தரப்பிலான வாதம் ஏற்புடையது. சக மாணவா் அளித்த புகாரை அடிப்படையாகக் கொண்டு அதற்குரிய தீா்வுகளை வழங்குவதற்கு மாணவரை குற்றஞ்சாட்டப்பட்டவா் திட்டியதை பிரதானமாக கருதுவது முறையல்ல; மேலும் உயிரிழந்த மாணவரின் பள்ளிப் பாதுகாவலா் என்ற முறையில் அவரை நல்வழிப்படுத்தி மீண்டும் அதே தவறை செய்யாமல் இருக்கவே திட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டவா் கூறியுள்ளாா். உயிரிழந்த மாணவருக்கும் தனக்கும் தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்னையும் இல்லை எனவும் அவா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒருவரைத் திட்டுவது தற்கொலைக்குத் தூண்டும் செயலாகாது எனக் கருதி குற்றஞ்சாட்டப்பட்ட பள்ளியின் பொறுப்பாளா் விடுவிக்கப்படுகிறாா் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

ம.பி.யில் கரோனா பாதிப்பு: இந்தூரில் எண்ணிக்கை அதிகரிப்பு!

மத்தியப் பிரதேசத்தின், இந்தூரில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார். நாட்டில் கரோனா தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்... மேலும் பார்க்க

கொண்டாடவே சென்றார்கள்.. சாக அல்ல.. சின்னசாமி அரங்கில் நடந்தது என்ன?

பெங்களூர்: தங்களது கிரிக்கெட் சாம்பியன்களை நேரில் காண வேண்டும் என்ற ஆவலோடு சென்ற இளைஞர்களும் இளைஞிகளும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மருத்துவமனைய... மேலும் பார்க்க

கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமியை உருவாக்க வழிவகுக்கும்: முர்மு

புது தில்லி: சுற்றுச்சூழலுக்கான ஒவ்வொரு செயலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமியை உருவாக்க வழிவகுக்கும் என்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி... மேலும் பார்க்க

தில்லி இல்லத்தில் "சிந்தூர்" மரக்கன்றுகளை நட்டார் பிரதமர் மோடி!

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தில்லியில் தனது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிந்தூர் மரக்கன்றுகளை நடும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. பூமியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவிலும்கூட.. பெங்களூர் கூட்ட நெரிசல் குறித்து சித்தராமையா சொன்ன ஒரு வார்த்தை!!

பெங்களூர் சின்னசாமி விளையாட்டரங்கில் நேரிட்ட கூட்ட நெரிசல் குறித்துப் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, சம்பவத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்திப் பேச விரும்பவில்லை, நாடு முழுவதும் பல இடங்களிலும் கூட... மேலும் பார்க்க

யோகி ஆதித்யநாத் பிறந்தநாள்: மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

உத்தரப் பிரதேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் 53வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் பல அரசியல் தலைவர்கள் ... மேலும் பார்க்க