செய்திகள் :

ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதாக ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!

post image

மும்பை: ஒழுங்குமுறை இணக்கங்களில் குறைபாடுகளுக்காக ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 2 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி இன்று அபராதம் விதித்துள்ளதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வங்கிகளில் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு, கேஒய்சி மற்றும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு - வழங்கல் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காக ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.97.80 லட்சம் அபராதமும், வங்கிகளால் வழங்கப்படும் நிதி சேவைகள் மற்றும் வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை, குறித்த சில உத்தரவுகளுக்கு இணங்காததற்காக பாங்க் ஆப் பரோடாவுக்கு ரூ.61.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு அறிக்கையில், கிசான் கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான மானியத் திட்டம், குறித்த சில வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக ஐடிபிஐ வங்கி மீது ரூ.31.8 லட்சம் அபராதமும், கேஒய்சி தொடர்பான சில வழிகாட்டுதல்களுக்கு இணங்காததற்காக பேங்க் ஆப் மகாராஷ்டிராவுக்கு ரூ.31.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஊழியர்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தும் நெட்கியர்!

இந்தியாவில் ரூ.85,000 கோடி முதலீடு செய்யும் ஜியோஸ்டார்! யூடியூபை மிஞ்சுமா?

இந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறையின் வரலாற்றில் முன்னிருக்கும் பெரிய அறிவிப்பாக, ஜியோஸ்டார் (JioStar) நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் $10 பில்லியன் (சுமார் ரூ. 85,000 கோடி) அளவுக்கு உள்ளடக்க தயா... மேலும் பார்க்க

ஊழியர்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தும் நெட்கியர்!

புதுதில்லி : 'நெட்கியர்' நிறுவனம், அடுத்த 12 முதல் 18 மாதங்களில் தனது சென்னை சாப்ட்வேர் டெவலப்மென்ட் சென்டர் குழுவை, 100 நபர்களாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.தற்போது நெட்ஜியர் இந்தியாவ... மேலும் பார்க்க

தி மிஸ்ஸிங் லிங் நிறுவனத்தை கையகப்படுத்திய இன்போசிஸ்!

புதுதில்லி: ஆஸ்திரேலிய சைபர் செக்யூரிட்டி சேவை நிறுவனமான, 'தி மிஸ்ஸிங் லிங்'-கை சுமார் ரூ.532 கோடி ஒப்பந்தம் மூலம் கையகப்படுத்தியுள்ளதாக இன்போசிஸ் இன்று தெரிவித்துள்ளது.அதன் துணை நிறுவனமான இன்போசிஸ், ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.84.53 ஆக முடிவு!

மும்பை: தொடர்ச்சியாக அந்நிய நிதி வரத்து மற்றும் வலுவான உள்நாட்டு தரவுகளால் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் இன்று இந்திய ரூபாய் 1 காசு உயர்ந்து ரூ.84.53 ஆக முடிந்தது.ஏப்ரல் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வ... மேலும் பார்க்க

போகோ முதல் ஐடெல் வரை.. இந்த வார புதிய வெளியீடுகள்!

போகோ இந்தியா வெளியிட்டுள்ள புதிய மொபைல்போன் முதல் டிவோலியின் சாங்க் புக் வரை இந்த வாரம் வெளியான புதிய கேட்ஜெட்கள் பற்றி இங்கு காணலாம்.டேக் ஹியூயர் சன் கிளாஸஸ் (Tag Heuer Sunglasses)சுவிஸை தலைமையிடமாகக... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து முடிவு!

மும்பை: இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம், ஏப்ரல் மாதத்தில் வரலாறு காணாத ஜிஎஸ்டி வசூல் மற்றும் தொடர்ந்து வரும் அந்நிய நிதி வரத்து ஆகியவற்றால் மும்பை பங்குச் சந்தை, குறியீடான சென்செக்ஸ் உயர்ந்தது முட... மேலும் பார்க்க