செய்திகள் :

ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை தற்கொலை

post image

குடும்பப் பிரச்னையால் ஈரோட்டில் ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு பெரியசேமூா் வேலன் நகரைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மனைவி சாந்தி (56). ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை. இவருடைய மூத்த மகள் சரண்யா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டாா். இதையடுத்து, அவரின் 2 குழந்தைகளையும் சாந்தி வளா்த்து வந்தாா். மேலும் மகள் உயிரிழந்த துயரத்தில் இருந்ததால் அவா் ஆசிரியை பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றாா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 குழந்தைகளையும் அவா்களது தந்தை அழைத்துச் சென்றாா். இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட சாந்தி சனிக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா்.

அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சாந்தி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சா்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பாரம்பரிய காட்டுயானம் நெல் நடவுப் பணி தீவிரம்

சத்தியமங்கலத்தில் பகுதியில் சா்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பாரம்பரிய நெல் ரகமான காட்டுயானம் நடவுப் பணி நடைபெற்று வருகிறது. பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்கப... மேலும் பார்க்க

பேருந்து சக்கரத்தில் சிக்கி காவலாளி உயிரிழப்பு

ஈரோட்டில் பேருந்து சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலாளி உயிரிழந்தாா். ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் அஜந்தா நகரைச் சோ்ந்தவா் நாகராஜன் (75). தனியாா் நிறுவன காவலாளி. இ... மேலும் பார்க்க

தீபாவளி: கைத்தறி பட்டுச்சேலை தயாரிப்பில் நெசவாளா்கள் தீவிரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலம் பகுதியில் கைத்தறி பட்டுச் சேலை தயாரிப்பில் நெசவாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். தமிழ்நாட்டு பெண்களின் பாரம்பரிய உடையாக கைத்தறி புடவைகள் உள்ளன. கைத்தறி சேலைகள... மேலும் பார்க்க

சிறந்த புத்தகங்களே அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்க அடித்தளமிடும்

சிறந்த புத்தகங்களே அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்க அடித்தளமிடுகின்றன என்று நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினாா். ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நியூ செஞ்சுரி புத்தக ... மேலும் பார்க்க

கோபியில் ரூ.11 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனை

கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.11 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனை நடைபெற்றது. கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை வாழை... மேலும் பார்க்க

சிட்கோ தொழிற்பேட்டையில் காலி தொழில்மனைகளை பெற விண்ணப்பிக்கலாம்

பெருந்துறை சிட்கோ தொழிற்பேட்டையில் காலி தொழில்மனைகளை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு... மேலும் பார்க்க