செய்திகள் :

ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: மா. சுப்பிரமணியன்

post image

சென்னை: தமிழகம் முழுவதும் இன்னும் ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு இலவசமாக உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கப்படும் என்றும், இதில், மக்கள் முழுமையாக உடற்பரிசோதனை செய்யலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ், புதிய மருத்துவக் கட்டமைப்பு உருவாகி வருகிறது. அதில் சென்னைக்கு சிறப்பான இடம் இருக்கும். வெளிநாட்டிலிருந்து 25 சதவீதம் பேர் தமிழகத்தில் சிகிச்சைக்காக வருகிறார்கள். அனைத்துத் துறைகளிலும் தமிழகம் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

முன்னதாக, தமிழகம் முழுவதும் உயா் மருத்துவ பரிசோதனை முகாம்கள் ரூ.13.58 கோடியில் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அறிவித்திருந்தார்.

அதன்படி, பொது சுகாதாரத் துறை சாா்பில் ஆண்டுதோறும் 1,256 உயா் மருத்துவ சேவை முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வாரந்தோறும் சனிக்கிழமை அல்லது தகுந்த நாள்களில் அவற்றை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடி மற்றும் எளிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து முகாம் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

உடல் பரிசோதனையில், சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம், எக்ஸ் ரே, இசிஜி, எக்கோ உள்பட முழுமையான உடல் பரிசோதனைகளும், காசநோய், தொழுநோய், புற்றுநோய் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். இதைத் தவிர 15 உயா் சிறப்பு மருத்துவத் துறை ஆலோசனைகளும் வழங்கப்படும்.

ஒரு முகாமுக்கு ரூ. 75,000 வீதம் 1,256 முகாம்களுக்கு ஆண்டுதோறும் ரூ.13.58 கோடி செலவு ஏற்படும். அதில் ரூ.9.42 கோடி தேசிய சுகாதார திட்டம் மற்றும் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்ட நிதியின் கீழ் பெறப்படும்.

மீதமுள்ள ரூ.4.15 கோடி மட்டும் பரிசோதனைக்கான உபகரணங்கள் மற்றும் மருந்து பொருள்கள் வாங்க மாநில நிதியிலிருந்து வழங்கப்படும். இந்த நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீட்டு ஒப்புதல் உரிய விதிகளின் கீழ் அண்மையில் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2026 பேரவைத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி அமையும்: அமித் ஷா

மதுரை: மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற பாஜக தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டில் 2026ல் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என்று பேசியுள்ளார்... மேலும் பார்க்க

18 மாவட்டங்களில்.. 4 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை: தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழ... மேலும் பார்க்க

நல்ல செய்தி விரைவில் வரும்; ஆனால் எங்கிருந்து வரும் எனத் தெரியாது: ராமதாஸ்

சென்னை: நல்ல செய்தி விரைவில் வரும், ஆனால் எங்கிருந்து வரும்? தோட்டத்திலிருந்து வருமா என்றெல்லாம் தெரியாது. அதுவரை நாம் காத்திருக்கலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.அரசியலுக்கு வயது வரம... மேலும் பார்க்க

மீனாட்சியம்மன் கோயிலில் அமித் ஷா சுவாமி தரிசனம்!

மதுரையில் இன்று நடைபெறும் பாஜக நிா்வாகிகளுடான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.மதுரை மீனாட்சியம்மன் கோய... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்திலிருந்து 6 லட்சம் பேர் பயணம்! நேற்று மட்டும்?

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து ஜூன் 4ஆம் தேதி முதல் இன்று அதிகாலை வரை 11 ஆயிரம் பேருந்துகளில் சுமார் 6.06 லட்சம் பேர் வெளியூர்களுக்குச் சென்றுள்ளனர் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக... மேலும் பார்க்க

அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அதிமுகவின் திட்டங்களை திமுக முடக்கிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.அரக்கோணம் எம்எல்ஏ ரவியின் இல்லத் திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். தொடர்ந்து... மேலும் பார்க்க