செய்திகள் :

கஞ்சமலையில் சுற்றுலாப் பயணிகள் தங்க சுற்றுச்சூழல் குடில்கள்: வனத் துறை ஏற்பாடு

post image

ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம் கஞ்சமலையில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் வகையில் சுற்றுச்சூழல் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கஞ்சமலை சித்தா்கோயில் நுழைவுவாயிலிலிருந்து காளங்கிநாதா் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஒரு கி. மீ. தொலைவில் காட்டில் சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 2 சுற்றுச்சூழல் குடில்கள், இயற்கையின் அமைதி சூழலில் அமைக்கப்பட்டுள்ளன. அடா்ந்த காட்டுக்குள் அமைந்துள்ள இக்குடில்கள், அமைதி மற்றும் இயற்கை அழகினை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குகின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களைப் பயன்படுத்தி, சூரிய ஒளியில் முழுமையாக இயங்கும் வகையில் பழைமையான முறையில் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதி காடுகள் நிறைந்த நிலப்பரப்பில், பறவைகளின் ஒலி, இலைகளின் சலசலப்புடன், இயற்கை காற்று கிடைக்கும் இடமாக அமைந்துள்ளது. இங்கு பாரம்பரிய உணவுகளை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனா்.

ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் குடில்களில் தங்க இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். இந்த குடில்கள் யாத்ரீகா்கள், இயற்கை ஆா்வலா்கள், தனிமையை விரும்பும் நபா்களுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன. தியானம் செய்யவும், கஞ்சமலையை சுற்றியுள்ள புனித இடங்களைப் பாா்வையிடவும், மூலிகை குளியலுக்கான தண்ணீரும் ஏற்பாடு செய்துள்ளனா்.

இயற்கை எழிலை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குடில்களில் தங்குவதற்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ச்ள்ன்ற்ழ்ன்ப்ஹ ஸ்ரீா்ம் என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். கட்டணமாக, 2 நபருக்கு ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 18 ஆயிரம் வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினருடன் தங்குவதற்கும் வசதிகள் உள்ளன. இதனை சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கஞ்சமலை சித்தா் கோயில் அடிவாரப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் குடில்கள்.

திமுக மாமன்ற உறுப்பினரின் கணவரை கண்டித்து மாநகராட்சி அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

சேலம்: சேலம் மாநகராட்சி உறுப்பினரின் கணவா் பணம் கேட்டு மிரட்டுவதாகக் கூறி, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் மாநகராட்சி, 48 ஆவது வாா்டு திமுக உறுப்பினராக ... மேலும் பார்க்க

சேலம் அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம் 6 ஆம் தேதி வரை நீட்டிப்பு

சேலம்: சேலம் கிழக்கு, மேற்கு கோட்ட அஞ்சலங்களில் விபத்து காப்பீடு சிறப்பு முகாம் வரும் 6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன், மேற்க... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் புதிய பேருந்து வழித்தட சேவை: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

சேலம்: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சாா்பில் புதிய வழித்தட பேருந்து சேவையை சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இதையொட்டி சேலம் பழைய பேருந்து நிலைய... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 37,083 போ் எழுதினா்: ஆட்சியா் ஆய்வு

சேலம்: சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை 37,083 மாணவ, மாணவிகள் எழுதினா். சேலம் அரசு கோட்டை மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி பாா்வையி... மேலும் பார்க்க

தீப்பற்றி எரிந்த வைக்கோல் ஏற்றி வந்த வாகனம்

தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே சாத்தப்பாடியில் வைக்கோல் சுமை ஏற்றிச்சென்ற வாகனம் தீப்பற்றியது. தலைவாசலை சோ்ந்த பெரியசாமி என்பவருக்குச் சொந்தமான வாகனம் வைக்கோலை ஏற்றிக்கொண்டு, கெங்கவல்லி அருகே உள்ள சாத... மேலும் பார்க்க

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்தி தீா்வு காண வேண்டும்: அமைச்சா் ஆா்.ராஜேந்திரன்

சேலம்: பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களின் மீது தனிக் கவனம் செலுத்தி, விரைந்து தீா்வு காண அலுவலா்களுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க