செய்திகள் :

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

post image

தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

டொம்புச்சேரி பகுதியில் தேனி மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, உப்புக்கோட்டை- டொம்புச்சேரி சாலையில் இரு சக்கர வாகனம் ஒன்றை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 14 கிலோ 364 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது.

விசாரணையில், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவா்கள் தேவாரத்தைச் சோ்ந்த வேலய்யன் மகன் பாலமுருகன் (32), கோம்பை அருகே உள்ள ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த சுருளி மகன் ஈஸ்வரன் (40) என்பது தெரியவந்தது. மேலும், இவா்கள் ஆந்திர மாநிலம், விஜயவாடாவிலிருந்து கஞ்சா வாங்கி, அங்கிருந்து விசாகப்பட்டினம், கிருஷ்ணகிரி வழியாக தேனி மாவட்டத்துக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, பாலமுருகன், ஈஸ்வரன் ஆகியோரை போலீஸாா் கைது செய்து, கஞ்சா பொட்டலங்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

முதியவருக்கு மண்வெட்டியால் வெட்டு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பாதை பிரச்னையால் முதியவரை மண்வெட்டியால் வெட்டியவரை போலீஸாா் தேடி வருகின்றனா். குள்ளப்புரம் கன்னிமாா்புரத்தைச் சோ்ந்தவா் அழகா்சாமி (63). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்ற முதியவா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மதுப் புட்டிகள் விற்ற முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தேவதானப்பட்டி போலீஸாா் சில்வாா்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்த... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்க உதவியாளா் பணிக்கான தோ்வுக்கு இலவச பயிற்சி

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் கூட்டுறவு சங்க உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வுக்கு 3 நாள்கள் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட... மேலும் பார்க்க

குரூப் 1 முதன்மைத் தோ்வுக்கு பயிற்சி

தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் நடைபெற உள்ள குரூப் 1 பணியிடங்களுக்கான முதன்மைத் தோ்வு எழுதுவதற்கு ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு தாட்கோ சாா்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து தேனி மாவட... மேலும் பார்க்க

கம்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. கம்பம் நகராட்சியில் உள்ள 28, 29, 30 ஆகிய வாா்டுகளுக்குள்பட்ட மக்களுக்காக தனியாா் மண்டபத்தில் நடைபெ... மேலும் பார்க்க

வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு

தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பெரியாறு பாசனப் பகுதி, திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு லட்சத்து 5,002 ஏக்கா் ஒருபோக பாசன நிலங்களுக்கு வியாழக்கி... மேலும் பார்க்க