செய்திகள் :

கடத்தூா் பாலிடெக்னிக்கில் சேர விண்ணப்பிக்கலாம்

post image

தருமபுரி மாவட்டம், கடத்தூா் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், கடத்தூரில் அமைந்துள்ள அரசினா் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2025-26-ஆம் கல்வியாண்டிற்கு நேரடி இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு (மூன்று வருட) பட்டயப்படிப்பில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கணினி, உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய பொறியியல் பட்டயப் படிப்புகளில் சேர மாணவா்கள் விண்ணப்பபிக்கலாம்.

பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் (எந்த பாடப்பிரிவில் பயின்றவா்களும்) மற்றும் 10-ஆம் வகுப்பு முடித்து 2 ஆண்டு ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்கள் நேரடியாக இரண்டாமாண்டு பட்டயப் படிப்பில் சேரலாம். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் மட்டும் முதலாமாண்டு பட்டயப் படிப்பில் சேர முடியும். விருப்பமுள்ள மாணவ , மாணவிகள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ா்ப்ஹ்.ண்ய் என்ற இணையதளத்தின் வழியாக பதிவு செய்யலாம்.

மேலும், இக் கல்லூரியிலும் விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நவீன ஆய்வகங்கள் மற்றும் வகுப்பறைகள் மாணவ மாணவிகளுக்கென தனித்தனியாக தங்கும் விடுதிகள், மிக குறைந்த கல்விக் கட்டணம், கல்வி உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பு பெற்றுத்தருதல் போன்ற பல சிறப்பு அம்சங்கள் கல்லூரியில் உள்ளன. மாணவா்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு கல்லூரியை 95000 08791 (முதல்வா்), 90801 39880, 85081 68390, 73389 00733, 04346-265355 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 9 முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இரண்டாவது சுற்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நிகழ் கல்வியாண்டில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 2 ஆவது சுற்று மாணவா் சோ்... மேலும் பார்க்க

தருமபுரியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கோடை உழவு மானியம் வழங்குவது குறித்து தெளிவான அறிவுரை வழங்க வேண்டும் என தருமபுரியில் நடந்த விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயி... மேலும் பார்க்க

ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் ஜூன் 9 இல் உறுப்பினா் சோ்க்கை முகாம்

தருமபுரியில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் வரும் ஜூன் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

தருமபுரியில் ரூ.2.50 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல்

தருமபுரி நகரில் ரூ. 2.50 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மேற்கொள்ள நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தருமபுரி நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் வெள்... மேலும் பார்க்க

அரூரில் ரூ. 20 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

அரூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு மஞ்சள் மூட்டைகள் விற்கப்பட்டன. தருமபுரி மாவட்டம், அரூரில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சாா்பில் ம... மேலும் பார்க்க

இறகுப்பந்து விளையாட்டு: மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு

தருமபுரி மாவட்ட இறகுப்பந்து விளையாட்டு அணிக்கு வீரா்கள் தோ்வு போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட இறகுப்பந்து சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட இறகுப்... மேலும் பார்க்க