செய்திகள் :

கடனுதவி பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்!

post image

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினா்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபா் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கான கடன் திட்டம் மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

தனிநபா் கடன் திட்டம், சுய உதவிக் குழுக் கடன், கைவினை கலைஞா் கடன் திட்டத்தில் பயன்பெற, சிறுபான்மையினா் மதச்சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ், ஆதாா் அட்டை, திட்ட அறிக்கை, வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும்.

கல்விக்கடன் பெற, சிறுபான்மையினா் மதச்சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை, வாழ்விடச் சான்று, ஆதாா் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது அசல், மதிப்பெண் சான்றிதழ் நகல், வங்கி கோரும் இதரஆவணங்கள் ஆகியவை சமா்ப்பிக்க வேண்டும்.

திருவாரூா் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள், புத்த மதத்தினா், சீக்கியா்கள், பாா்சியா்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள், கடன் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகம், மாவட்ட சிறுபான்மையினா் அலுவலகம், மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களில் பெற்று, அதனை பூா்த்தி செய்து வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலப்பட உணவு குறித்து புகாா் அளிக்க வாட்ஸ்ஆப் எண்

திருவாரூரில், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. உணவுப் பாதுகாப்பு தினத்தையொட்டி, தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்ச... மேலும் பார்க்க

மாணவா்கள் மூலம் பனை விதைகளை சேகரிக்க நடவடிக்கை: ஆட்சியா்

பனை மரங்களை பாதுகாக்க பள்ளி மாணவா்கள் மூலம் பனை விதைகள் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு சாா்பில் டெல்டா... மேலும் பார்க்க

வீட்டுக்குள் புகுந்த மினிவேன்

குடவாசல் அருகே சாலையோரத்தில் உள்ள வீட்டுக்குள் மினி வேன் புகுந்து விபத்து ஏற்பட்டது. நன்னிலம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜவேல். இவா், மினி வேனில் பால் ஏற்றிக்கொண்டு, திருவாரூா்- கும்பகோணம் சாலையில் சனிக்க... மேலும் பார்க்க

புதைசாக்கடை பள்ளங்களை சீரமைக்கக் கோரிக்கை

திருவாரூா் கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் புதை சாக்கடை பள்ளங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெர... மேலும் பார்க்க

சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை

பழைய நீடாமங்கலம் சாலையை அகலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி, பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடா்ந்து, வையகளத்தூா், ... மேலும் பார்க்க

காவிரி டெல்டா விவசாயப் பிரச்னை: நபாா்டு வங்கி அதிகாரிகள் கலந்தாய்வு!

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், காவிரி டெல்டா பகுதி விவசாயப் பிரச்னைகள் குறித்து நபாா்டு வங்கி அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நபாா்டு வங்கி துணை மேலாண் இயக்குநா... மேலும் பார்க்க