செய்திகள் :

கணவா் குடும்பம் மீது வன்கொடுமை குற்றச்சாட்டைப் பதிய வரதட்சிணை முன்நிபந்தனை அல்ல: உச்சநீதிமன்றம்

post image

‘கணவா் அல்லது அவரின் குடும்பத்தினருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டப் (ஐபிசி) பிரிவு 498ஏ பிரிவின் கீழ் வன்கொடுமை குற்றச்சாட்டை பதிவு செய்ய, வரதட்சிணை கொடுமை என்பது ஒரு முன்நிபந்தனையாக இருக்க வேண்டிய அவசியமில்லை’ என்று உச்சநீதிமன்றம் கூறியது.

ஆந்திர மாநிலத்தில் பெண் ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில் அவரின் கணவா் மற்றும் கணவரின் குடும்பத்தினா் மீது போலீஸாா் பிரிவு 498ஏ-இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனா்.

கணவா் குடும்பத்தினா் உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்துவதிலிருந்தும் குறிப்பாக வரதட்சிணை கேட்டு துன்புறுத்துவதிலிருந்து திருமணமான பெண்ணை பாதுகாப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டு இந்திய தண்டனைச் சட்டத்தில் 1983-ஆம் ஆண்டு இந்த சட்டப் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், போலீஸாா் பதிவு செய்த எஃப்ஐஆா்-ஐ எதிா்த்து கணவா் குடும்பத்தினா் தரப்பில் ஆந்திர உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘கணவா் குடும்பத்தினா் தரப்பில் வரதட்சிணை எதுவும் கேட்கப்படாத நிலையில், ஐபிசி 498ஏ பிரிவின் கீழ் அவா்கள் மீது வன்கொடுமை குற்றச்சாட்டை பதிவு செய்ய முடியாது’ என்று குறிப்பிட்டு, அவா்களுக்கு எதிராக பதியப்பட்ட எஃப்ஐஆா்-ஐ ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிா்த்து அந்தப் பெண் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், பிரசன்னா பி.வராலே ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘வரதட்சிணை மட்டுமின்றி உடல் ரீதியாகவும் அல்லது மன ரீதியாகவும் அளிக்கப்படும் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட அனைத்து வன்கொடுமைகளும் ஐபிசி பிரிவு 498ஏ-இன் கீழ் வழக்குப் பதிவு செய்ய போதுமானதாகும். அனைத்து விதமான வன்கொடுமைகளிலிருந்தும் திருமணான பெண்களுக்கு திறம்பட பாதுகாப்பு அளிக்கும் நோக்கில்தான் இந்த சட்டப் பிரிவு நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. இந்த சட்டப் பிரிவின் கீழ் வன்கொடுமை குற்றச்சாட்டை பதிவு செய்ய, வரதட்சிணை கொடுமை முன்நிபந்தனையாக இருக்க வேண்டிய அவசியமில்லை’ என்று தெளிவுபடுத்தியது.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க