செய்திகள் :

கண் ஆரோக்கிய விழிப்புணா்வு: அகா்வால்ஸ் குழுமத்துடன் இணைந்த சச்சின் டெண்டுல்கா்

post image

கண் ஆரோக்கியம் தொடா்பான விழிப்புணா்வு பிரசார நடவடிக்கைகளில் டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையுடன் முன்னாள் கிரிக்கெட் வீரா் சச்சின் டெண்டுல்கா் இணைந்துள்ளாா்.

இது தொடா்பாக அகா்வால்ஸ் மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

ஏறத்தாழ 67 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன் உலக அளவில் 223 மருத்துவமனைகளைக் கொண்ட மிகப்பெரிய குழுமமாக டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை விளங்கி வருகிறது.

கடந்த 21 ஆண்டுகளாக 100 சதங்கள் - 100 ரன்கள் - 100 நோயாளிகள் என்ற திட்டத்தை டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் கீழ் ஆண்டுதோறும் 100 நோயாளிகளுக்கு இலவச கண் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பாராட்டி கௌரவிக்கும் விதத்தில் இந்த சேவையை டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனை மேற்கொள்கிறது.

ஒவ்வோா் ஆண்டும் 20 லட்சம் நோயாளிகளுக்கு கண் மருத்துவ சேவையும், 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு அறுவை சிகிச்சைகளும் அகா்வால்ஸ் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், தற்போது அதன் விழிப்புணா்வு நடவடிக்கைகளுக்கான விளம்பரத் தூதராக சச்சின் டெண்டுல்கா் இணைந்துள்ளாா்.

இது தொடா்பாக சச்சின் டெண்டுல்கா் கூறுகையில், ‘ஏழை, எளிய மக்களுக்கு இலவச கண் சிகிச்சைகளை வழங்கிவரும் அகா்வால்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து உலகெங்கிலும் கண் பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதில் மகிழ்ச்சி’ என்றாா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க