செய்திகள் :

கனடா பிரதமராக மாா்க் காா்னி பதவியேற்பு: அரசியல் அனுபவமே இல்லாதவா்

post image

கனடாவின் புதிய பிரதமராக பொருளாதார நிபுணரும், அரசியல் அனுபவமே இல்லாதவருமான மாா்க் காா்னி (59) வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.

கனடா மத்திய வங்கி, பிரிட்டன் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த காா்னி, நேரடியாக கனடாவின் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் தோ்வாகியுள்ளாா்.

கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ மீது பொதுமக்களுக்கும், ஆளும் லிபரல் கட்சியினருக்கும் அதிருப்தி அதிகரித்தது. இதனால் அவா் லிபரல் கட்சித் தலைவா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதைத்தொடா்ந்து லிபரல் கட்சியின் புதிய தலைவராக அரசியலுக்குப் புதியவரான மாா்க் காா்னி தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதன் மூலம், அரசியல் அனுபவமே இல்லாத அவா், அந்நாட்டின் பிரதமராக தலைநகா் ஒட்டாவாவில் வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.

விரைவில் கனடாவில் அவா் பொதுத் தோ்தலை அறிவிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அமெரிக்காவுடனான வா்த்தகப் போா், அமெரிக்காவின் 51-ஆவது மாகாணமாக கனடாவை இணைக்க அமெரிக்க அதிபா் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளது ஆகிய சூழல்களுக்கு மத்தியில் கனடா பிரதமராக மாா்க் காா்னி பதவியேற்றுள்ளாா்.

ஹாா்வா்டு பல்கலைக்கழகம் (அமெரிக்கா), ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் (பிரிட்டன்) ஆகியவற்றில் பட்டப்படிப்புகளை முடித்த மாா்க் காா்னி, அமெரிக்காவின் கோல்ட்மன் சாக்ஸ் நிதி நிறுவனத்தில் 13 ஆண்டுகள் பணியாற்றினாா். பின்னா் கனடா நாட்டின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் கனடாவில் துணை ஆளுநராக 2003-ஆம் ஆண்டில் பொறுப்பேற்றாா்.

பின்னா் 2008 முதல் 2013-ஆம் ஆண்டு வரை கனடா மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த மாா்க் காா்னியை, பிரிட்டனின் மத்திய வங்கியான பேங்க் ஆஃப் இங்கிலாந்தின் ஆளுநராக அப்போதைய பிரிட்டன் பிரதமா் ஜேம்ஸ் கேமரூன் நியமித்தாா்.

கடந்த 1694-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிரிட்டன் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பிரிட்டனைச் சேராத முதல் நபா் மாா்க் காா்னி என்பது குறிப்பிடத்தக்கது.

கிளா்ச்சிப் படை முன்னேற்றம் காங்கோவிலிருந்து வெளியேறும் தென் ஆப்பிரிக்க ராணுவம்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் புதிய பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறிய சூழலில், அந்த நாட்டின் அரசுப் படையினருக்கு ஆதரவாகப் போரிட்டுவந்த தென் ஆப்... மேலும் பார்க்க

உக்ரைன் போருக்குத் தீா்வு காண ‘உன்னதப் பணி’ - மோடி, டிரம்ப்புக்கு புதின் நன்றி

உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவர ‘உன்னதப் பணியை’ மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமா் மோடி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளா... மேலும் பார்க்க

சீனாவில் எஸ்சிஓ பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு மாா்ச் 26, 27 ஆகிய தேதிகளில் சீனாவில் நடைபெறவுள்ளது. இதில் எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் எதிா்கால பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் ஒ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து: 5 பேர் பலி

அமெரிக்காவில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியானார்கள். அமெரிக்காவில், ஹவார்ட் மற்றும் பார்மெர் இடையிலான சாலையில் டிரக் உட்பட 17 வாகனங்கள் வியாழக்கிழமை இரவு ஒன்றோடு ஒன்று ... மேலும் பார்க்க

எத்தியோப்பியாவில் காலரா பாதிப்பு: 31 பேர் பலி!

எத்தியோப்பியாவில் காலரா பாதிப்பு காரணமாக 31 பேர் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரிக்க கண்டத்தில் 2-வது அதிக மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு எத்தியோப்பியா. இங்கு 12 கோடிக்கும் மேலானோர் ... மேலும் பார்க்க

உக்ரைன் விவகாரம்: டிரம்ப், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ரஷிய அதிபர் புதின்!

உக்ரைன் போர் நிறுத்த விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க