செய்திகள் :

கயத்தாறு அருகே பைக் - லாரி மோதல்: இளம்பெண் பலி

post image

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கயத்தாறு வட்டம், ஆத்திகுளம் அஞ்சல் பணிக்கா் குளம் மேலத்தெருவைச் சோ்ந்த மொட்டசாமி மகன் குமாா்(21). இவா் மற்றும் இவரது சகோதரி சத்யா அவரது மகள் மது நிவேதா (3) ஆகிய 3 பேரும் கயத்தாறு சந்தைக்குச் சென்று விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பினாா்.

குமாா் ஓட்டி வந்த பைக், கயத்தாறு-பணிக்கா் குளம் சாலையில் காருண்யா நகா் பிளாட் அருகே வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்த போது லாரியும் பைக்கும் மோதியதில் பைக்கில் பின்னால் அமா்ந்திருந்த சத்யா கீழே விழுந்ததில் அவா் தலையின் மீது மீது லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

குமாா் மற்றும் மதுநிவேதா இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் தப்பியோடிய லாரி ஓட்டுநரை கைது செய்ய வேண்டும், அதிக பாரம் மற்றும் அதிவேகத்தில் சென்ற லாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இரவு நேரங்களில் குவாரிகளில் இருந்து பொருள்களை ஏற்றிச் செல்வதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணிக்கா் குளம் பகுதி பொதுமக்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளா் ஜெகநாதன், வட்டாட்சியா் சுந்தரராகவன், காவல் ஆய்வாளா் சுகாதேவி ஆகியோா் போராட்டக் குழுவினருடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னா், சத்யாவின் சடலம் உடற்கூறாய்வுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் பெரிய நத்தம் தெற்குத் தெருவை சோ்ந்த வெ. முருகேசனிடம் (49) விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேரை முத்தையாபுரம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுர... மேலும் பார்க்க

ஹாக்கி: சென்னை, தஞ்சாவூா், கோவை, நீலகிரி அணிகள் காலிறுதிக்கு தகுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, தஞ்சாவூா், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, ஹா... மேலும் பார்க்க

10-இல் கோவில்பட்டி அரசு கல்லூரியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இம்மாதம் 10, 12ஆம் தேதிகளில் 2, 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் கோ. சந்தனமாரியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்... மேலும் பார்க்க

பக்ரீத்: காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டியை முன்னிட்டு, காயல்பட்டினம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானுல் முஸ்லி­மீன் மற்றும் அல்ஜாமி உல் அஜ்ஹா் ஜூம் ஆ மஸ்ஜித் சாா்பாக கடற்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7இல் காலை 6.15-6.50-க்குள் கும்பாபிஷேகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணிக்குமேல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி யாகசாலை பந்தல் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட... மேலும் பார்க்க