செய்திகள் :

கருண் நாயரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியா? - அஜித் அகர்கர் சூசகம்!

post image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் இருந்து கருண் நாயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது குறித்து அணித் தேர்வர் அஜித் அகர்கர் சூசகமாக பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளனர். இந்தத் தொடர் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று (செப்.25) அறிவிக்கப்பட்டது. துபையில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில், அணித் தேர்வர் அஜித் அகர்கர் இருவரும் அணியை அறிவித்தனர்.

வழக்கம் போல கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணை கேப்டனான ரிஷப் பந்த் காயம் காரணமாக குணமாகாததால் அவருக்குப் பதிலாக அனுபவம் வாய்ந்த மூத்த வீரரும் ஆல்-ரவுண்டருமான ரவீந்திர ஜடேஜா இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

8 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த கருண் நாயர் அதிரடியாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் இடம்பெற்றுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கருண் நாயர் அதில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருந்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக 2016 ஆம் ஆண்டில் முச்சதம் விளாசியிருந்த கருண் நாயர் இந்தத் தொடரில் சரியாக சோபிக்காததது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் அதிருப்தி அடையவைத்தது.

இந்த நிலையில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அணித் தேர்வர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “வெளிப்படையாகச் சொல்லப்போனால், நாங்கள் அவரிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம். அவர் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.

அவருக்குப் பதிலாக தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம். நாங்கள் அனைவருக்குமே 15 முதல் 20 போட்டிகளில் வாய்ப்பு வழங்கவேண்டும் என நினைக்கிறோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது இப்போது ஒத்துவராது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேவ்தத் படிக்கல் இடம்பெற்றிருந்தார். தர்மசாலாவில் நடைபெற்ற இங்கிலாந்து எதிரான போட்டியிலும் அரைசதம் அடித்திருந்தார். அவர் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்” என்றார்.

End Of Karun Nair’s Test Career? Ajit Agarkar Drops Blunt Hint

இதையும் படிக்க... சென்னை டூ சிட்னி..! அஸ்வினை வரவேற்று விடியோ வெளியிட்ட சிட்னி தண்டர்!

பயிற்சி ஆட்டத்தில் வேகப் பந்துவீச்சாளருக்கு காயம்; இந்திய அணிக்கு பின்னடைவா?

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தின்போது, இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரி... மேலும் பார்க்க

இந்த உலகக் கோப்பைத் தொடருக்காக காத்திருக்கிறோம்: ஸ்மிருதி மந்தனா

அணியில் உள்ள அனைவரும் போட்டியை வென்று கொடுப்பவர்கள் என தங்கள் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் மீண்டும் இந்திய அணியுடன் இணைவது எப்போது? அஜித் அகர்கர் பதில்!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காயத்திலிருந்து மீண்டு எப்போது அணியுடன் மீண்டும் இணைவார் என்பது குறித்து இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் பேசியுள்ளார்.மேற்கிந்தியத் தீவுகள்... மேலும் பார்க்க

சென்னை டூ சிட்னி..! அஸ்வினை வரவேற்று விடியோ வெளியிட்ட சிட்னி தண்டர்!

இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் தொடரில் இணைந்ததை வரவேற்று சிட்னி தண்டர் அணி விடியோ வெளியிட்டுள்ளது.இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியைப் போன்று ஆஸ்திரேலியாவில் ந... மேலும் பார்க்க

இந்திய அணி அழுத்தத்திலிருந்து விடுபட இதனை செய்ய வேண்டும்: முன்னாள் ஆஸி. கேப்டன்

ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் சொந்த மண்ணில் விளையாடும் அழுத்தத்திலிருந்து விடுபட இந்திய அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லேனிங் பேசியுள்ளார்.ஐசிசி மகளிர்... மேலும் பார்க்க

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து 6 மாதங்களுக்கு ஓய்வு கேட்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர்!

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனக்கு 6 மாதங்களுக்கு ஓய்வளிக்க வேண்டுமென இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளார்.ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணி இன்ற... மேலும் பார்க்க