செய்திகள் :

கரூர்: 'உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம்; காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம்' - மோடி அறிவிப்பு

post image

கரூர் துயர சம்பவத்திற்கு நேற்று இரங்கல் தெரிவித்திருந்தார் இந்திய பிரதமர் மோடி.

தற்போது உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார் மோடி.

அது குறித்து பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது...

"தமிழ்நாட்டில் உள்ள கரூரில் நடந்த அரசியல் பரப்புரையில் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியில் தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

கரூர் | மருத்துவமனை
கரூர் | மருத்துவமனை

முதலமைச்சரின் இழப்பீடு

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முதலமைச்சர் பொது நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் அறிவித்துள்ளார்.

விஜய் அறிவிப்பு என்ன?

தவெக தலைவர் விஜய் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம், சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் தெரிவித்திருக்கிறார்.

கட்டணம் இல்லை

கரூரில் நடந்த துயர சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்காது. அதை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று தெரிவித்திருந்தார்.

கரூர் நெரிசல்: "கலெக்டரையும், எஸ்.பியையும் சஸ்பெண்ட் செய்யணும்" - அண்ணாமலை சொல்வதென்ன?

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர், சிலர் கவலைக்கிடமா... மேலும் பார்க்க

கரூர்: அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்யும் தடயவியல் துறை; விசாரணையைத் தொடங்கிய அருணா ஜெகதீசன்

கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 க்கும் மேற்பட்ட உயிரிழந்திருக்கின்றனர்.இந்த சம்பவம் குறித்து விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்த விசாரணை ஆணையத... மேலும் பார்க்க

TVK Vijay Karur Stampede: "கரூர் சம்பவத்தால் வருத்தமடைந்தேன்" - மம்முட்டி இரங்கல்

நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் 40 பேர் உயிரிழந்திருந்தனர் பலர் காயமடைந்திருந்தனர்.தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு நேரில் சென்று ஆ... மேலும் பார்க்க

கரூர்: அன்புமணிக்கும், செந்தில் பாலாஜிக்கும் ஒதுக்கிய உழவர் சந்தை திடல்; விஜய்க்கு மறுத்தது ஏன்?

த.வெ.க. சார்பில் உழவர் சந்தை திடலில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தார்கள். அந்த இடத்தில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்திருக்கவில்லை. உழவர் சந்தை பகுதியில் விசாரித்ததில், அன்புமணியின் கூட்டத்த... மேலும் பார்க்க

``விஜய் போன்ற பிரபலங்களுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் வரும், அதனால்'' - FEFSI சொல்வதென்ன?

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (film employees federation of south india) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ... மேலும் பார்க்க

கரூர்: 'சிபிஐ விசாரணை வேண்டும்'- ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "நேற்றைய தினம் நடந்த இந்த துயர சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை... மேலும் பார்க்க