செய்திகள் :

கரூர் சம்பவம்: ''சிபிஐ விசாரணை மூலம் பல உண்மைகள் வெளிவரும்''- மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

post image

மத்திய மீன் வளத்துறை அமைச்சர் எல்.முருகன் இன்று ராமேஸ்வரம் வந்திருந்தார். இங்குள்ள காஞ்சி சங்கராச்சாரியர் மடத்தில் சிறப்பு யாக பூஜை நடத்திய பின் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எல்.முருகன், ''ராமேஸ்வரத்திற்கு புதிதாக அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 17-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. ஏற்கனவே பாம்பன் கடலின் மீது புதிதாக கட்டப்பட்ட பாலத்தினை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார்.

பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில் மீனவர்களுக்கு என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பாசி வளர்ப்பு, இறால் மீன் குஞ்சுகள் வளர்ப்பு, இலங்கை கடற்படையினரின் இடையூறுகளில் இருந்து தமிழக மீனவர்கள் விடுபட மாற்று தொழிலாக ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்குதல் என பல திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆன போதும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் போது பல்வேறு காரணங்களால் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்படுகின்றனர். தற்போது கூட சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், அவர்களை மீட்டு தருமாறு என்னிடம் மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க உள்ளேன்.

சாமி தரிசனம் செய்த அமைச்சர் எல்.முருகன்

திமுக-வை பொறுத்தமட்டில் மக்களின் உயிருடன் விளையாடும் அரசியலை செய்து வருகிறது. பிரதமர் மோடி பிரதமர் ஆனதில் இருந்து 11 லட்சம் கோடி பணம் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நிதியே தரவில்லை என கூறும் திமுக, தமிழகத்தையும் தமிழ் மக்களையும் நாட்டிலிருந்து துண்டாடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பல வருடங்கள்  மத்திய அரசில் பவர் புல்லான துறைகளை தங்கள் பொறுப்பில் வைத்திருந்த அவர்கள் கச்சத்தீவு மற்றும் மீனவர் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயலவில்லை. கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்ட போது திமுக தலைவர் கருணாநிதி மெளமாக இருந்தார்.

கரூரில் விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக நாங்கள் அரசியல் செய்யவில்லை. ஆனால் திமுக நாடகம் ஆடுகிறது. இன்று கூட சட்டமன்றத்தில் ஒரு நாடகத்தை நடத்தியுள்ளனர்.  விஜய்யின் கரூர் கூட்டம் நடப்பதற்கு முதல் நாளே கூட்டத்தில் ஏதோ நடக்க போகிறது என மக்கள் மத்தியில் பேச்சு இருந்தது. அதன்படியே இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

அமைச்சரிடம் மீனவர் குடும்பத்தினர் மனு அளித்தனர்
மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்ன அமைச்சர்

இந்த துயர சம்பவம் குறித்து சி பி ஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சி பி ஐ விசாரணையில் கூட்டத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பல உண்மைகள் வெளிவர போகிறது'' என்றார்.

முன்னதாக இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்டுத் தருமாறு மீனவ குடும்பங்களை சேர்ந்த பெண்கள் அமைச்சர் முருகனிடம்  கோரிக்கை மனு அளித்தனர். அப்போது அமைச்சருடன் மாவட்ட பாஜக தலைவர் முரளிதரன், மாநில நிர்வாகி நாகராஜன் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

``ட்ரம்பை பார்த்து மோடி பயப்படுகிறார்'' - ராகுல் காந்தி அடுக்கும் 5 காரணங்கள்

நேற்று வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை விரைவில் நிறுத்தும்' என்று பேசியிருந்தார். ராகுல் காந்தி பதிவு இது குறித்து மக்களவை எதிர்க்கட்சி த... மேலும் பார்க்க

"விஜய்க்கு எதற்கு ஆதரவாக இருக்கிறோம் என்றால்.!" - கூட்டணி குறித்து தமிழிசை

தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (அக்.16) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். விஜய்க்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. கரூர் விஷயத்தில் முழுமையான கவனம் செலுத்தாமல் அரசாங்கம்... மேலும் பார்க்க

GD Naidu பாலம் சர்ச்சை - DMK அரசுக்கு சில கேள்விகள் | MK Stalin | Vikatan

GD Naidu என கோவை அவினாசி பாலத்துக்குப் பெயர் வைத்ததில் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் தெருக்கள், சாலைகளில் இருக்கும் சாதி அடையாளப் பெயர்களை நீக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைக்கு மா... மேலும் பார்க்க

`இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறதா?' - ட்ரம்ப் சொல்லும் புது தகவல்!

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால் இந்தியா மீது கூடுதல் 25 சதவிகித வரி என மொத்தம் 50 சதவிகித வரியை விதித்துள்ளது அமெரிக்கா. இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கும் பணத்தை, அது உக்ர... மேலும் பார்க்க

மதுரை: மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா - அடுத்த மேயர் யார்? திமுகவில் பரபரப்பு!

மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது மதுரை திமுக-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சிஅமைச்சர் பிடிஆரின் ஆதரவாளரான மேயர் தரப்பிற்கும், பெரும்பாலான த... மேலும் பார்க்க