செய்திகள் :

தீபாவளி வசூல்: `கட்டுக் கட்டாக பணம், பட்டுப்புடவைகள்' -வட்டார போக்குவரத்து அலுவலக ரெய்டில் அதிர்ச்சி

post image

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களிலும் தீபாவளி விழா லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் இயங்கிவரும் நாகர்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் தீபாவளி விழா கால லஞ்சம் அதிக அளவில் பெறப்படுவதாக ரகசிய தகவல் வந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட லஞ்சப்பணம்
பறிமுதல் செய்யப்பட்ட லஞ்சப்பணம்

தகவலின் அடிப்படையில் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் சிவசங்கரி, ராமா மற்றும் உதவி ஆய்வாளர் பொன்சான் ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்த பட்டுப்புடவைகள்
லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்த பட்டுப்புடவைகள்

சோதனையில் அலுவலக சூப்பிரண்டு ராஜலட்சுமி என்பவரிடமும், உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஆகியோரிடம் இருந்தும் கணக்கில் வராத லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் அலுவலகத்தில் புத்தம் புதிதாக உள்ள 20-க்கும் மேற்பட்ட பட்டுப் புடவைகள், பட்டுத் துப்பட்டாக்கள் மற்றும் பட்டுச் சால்வைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சோதனையில் ரூ.52,600 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்சமாகப் பணம் மட்டுமல்லாமல் பட்டுப் புடவை மற்றும் பட்டுச் சால்வைகள் லஞ்சமாகப் பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட வருவதை அறிந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ்குமார், கலைச்செல்வி மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல் ஆகியோர் அலுவலகத்திலிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.

அவர்கள் தங்களது செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.

டிஜிட்டல் கைது; ரூ.58 கோடியை இழந்த 72 வயது தொழிலதிபர் - மோசடி கும்பல் சிக்கியது எப்படி?

மும்பையில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த இணைய குற்றங்களால் அதிக அளவில் முதியவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். புதிதாக 72 வயது முதியவ... மேலும் பார்க்க

கோத்தகிரி: ஒருபக்கம் சுருக்கு கம்பி, மறுபக்கம் மின்கம்பி - துடிதுடித்து இறந்த 2 கரடிகள்

வனத்துக்கும் வன உயிரினங்களுக்கும் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நீலகிரியில் வன விலங்குகள் இயற்கைக்கு மாறாக உயிரிழக்கும் துயரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. துப்பாக்கி வேட்டைக்கு அடுத்தபடியாக சுர... மேலும் பார்க்க

தீபாவளி வசூல்: பட்டாசு ஆலை, கடைகளில் லட்சக்கணக்கில் வசூல் - விருதுநகரில் பிடிபட்ட தீயணைப்பு வீரர்கள்

விருதுநகரில் தீபாவளிக்காக பணம் வசூலித்த 3 தீயணைப்பு வீரர்களை பணியிட மாற்றம் செய்து தீயணைப்புத்துறை தென் மண்டல துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்த வினோத்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர்: டாஸ்மாக் சென்றவரை தாக்கி பணம், நகை கொள்ளை; நண்பர் ஏவிய கும்பல் வெறிச்செயல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி இந்திரா நகரில் வசிப்பவர் முனியசாமி (41). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.முனியசாமி, தன் நண்பரான கனகராஜ் என்பவருடன் வீட்டில் இருந்து டாஸ்மாக் கிளம்பியுள்ளார். சிவகாசி ரிசர்வ... மேலும் பார்க்க

போலீஸால் பாதுகாக்கப்படும் 'போலி' வேட்பாளர்?- கைதுக்காக காத்திருக்கும் 200 காவலர்கள்! - என்ன சிக்கல்?

பஞ்சாப் மாநிலத்தின் ராஜ்யசபா பதவிக்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) வாக்களிக்கும் மறைமுக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டவர் ஜனதா கட்சியின் தலைவர் நவ்நீத் சத... மேலும் பார்க்க

போக்சோ வழக்கு: அகில இந்துசபா தலைவர் ஸ்ரீ கைது; விவரம் என்ன?

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அகில இந்து மகாசாபாவின் தலைவர் ஶ்ரீ என்கிற ஶ்ரீ கந்தன் போக்சோ சட்டம் மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிர... மேலும் பார்க்க