ராமநாதபுரம் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம்; இரவோடு இரவாக பெயர் சூட்ட...
கரூர் பலி: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பாஜக கவுன்சிலர் மனு!
கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் மனு அளித்துள்ளார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் அருள் முருகன் அமர்வில் வெள்ளிக்கிழமை காலை விசாரணைக்கு வந்தது.
இதுதொடர்பான சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையை அணுகுமாறு மனுதாரரான சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்த்துக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
ஏற்கெனவே, கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரை கிளையை அணுகுமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கரூரில் கடந்த வாரம் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.