செய்திகள் :

கரூர் மரணங்கள்: "நாங்கள் என்ன தவெக-வுக்கு மார்க்கெட்டிங் ஆபீஸர்களா?" - கடுகடுத்த அண்ணாமலை

post image

"நாங்கள் என்ன தவெக-வுக்கு மார்க்கெட்டிங் ஆபீஸர்களா?" என்று செய்தியாளர்களிடம் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுகடுத்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்
விஜய்

கரூரில் தவெக கூட்டத்தில் 41 பேர் மரணமடைந்த சம்பவத்தில், திமுக அரசைக் குற்றம்சாட்டியும், தவெக தலைவர் விஜய்யை ஆதரித்தும் பேசி, தவெக-வினரை ஆச்சரியப்படுத்தியவர் அண்ணாமலை.

இந்நிலையில் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் கரூர் சம்பவம் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அதில், தவெக-வுக்கு எதிராகக் கடுமையான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியிருந்தார்கள்.

இந்தப் பரபரப்பான சூழலில் ஒட்டன்சத்திரம் செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.

விமானம் தரையிறங்குவதில் தாமதமான நிலையில் வெளியில் வந்தவரிடம், பாஜக-திமுக குறித்து சீமான் கூறியுள்ளது குறித்தும், கரூர் சம்பவ நீதிமன்ற வழக்கு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

அப்போது பரபரப்பாக இருந்த அண்ணாமலை, "இதை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம் கேளுங்கள். அவரைத் தவிர மற்ற அனைவரும் கரூர் சம்பவம் பற்றிப் பேசுகிறார்கள். நாங்கள் என்ன தவெக-வுக்கு மார்க்கெட்டிங் ஆபீஸர்களா? எங்களிடம் கேள்வி கேட்கும் நீங்கள் அக்கட்சியினரிடம் கேட்க வேண்டும்.

தொடர்ந்து எங்களையே விரட்டி விரட்டி கேள்வி கேட்பது எந்த விதத்தில் நியாயம்? சொல்ல வேண்டிய கருத்துகளையெல்லாம் ஏற்கனவே சொல்லி விட்டோம். ஆகையால் சம்பந்தப்பட்ட கட்சி நபர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்புங்கள்" என்று கடுகடுத்த குரலில் பேசிவிட்டுச் சென்றார்.

TVK : விஜய்யை வளைக்கப் பார்க்கிறதா பா.ஜ.க... டெல்லி பல்ஸ் என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, "தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் விஜய் செல்லப் போகிறார்... அவரை கையில் எடுத்துவிட்டது பா.ஜ... மேலும் பார்க்க

சனே தகைச்சி: ஜப்பானின் முதல் பெண் பிரதமர் - பெண்ணியவாதிகளுக்கு மகிழ்ச்சி அளிக்காதது ஏன்?

ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவியேற்கவிருக்கிறார் 64 வயதாகும் சனே தகைச்சி. மேலும் அமைச்சரவையில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.ஜப்பான் சர்வதேச அளவில் பாலின ... மேலும் பார்க்க

கரந்தை: `நாங்களும் கொடுக்காத மனு இல்ல பாக்காத ஆள் இல்ல' சிதைந்த படித்துறையை சீரமைக்க கோரும் மக்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையில் உள்ள வடவாறு படித்துறை கடந்த எட்டு வருடமாக சிதைந்து கிடக்கிறது. அதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மக்... மேலும் பார்க்க

பால் தாக்கரே இறந்தபிறகு அவரது கைரேகையை எடுத்தாரா உத்தவ்? - ஷிண்டே கட்சித் தலைவரின் பேச்சால் சர்ச்சை

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி 2023ம் ஆண்டு இரண்டாக உடைந்தது. தற்போது துணை முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணி உருவாகி ஒட்டுமொத்த கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது... மேலும் பார்க்க

உங்களது வாகனத்தில் ஃபாஸ்ட் டேக் இல்லையா? பிரச்னையே இல்லை; மத்திய அரசு அறிவித்த புதிய நடைமுறை

பணமாக அல்லாமல், டிஜிட்டல் முறையில் சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும் என்று தான் ஃபாஸ்ட் டேக் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை 2021-ம் ஆண்டு முதல், தேசிய நெடுஞ்சாலைகளில் பய... மேலும் பார்க்க