செய்திகள் :

கரூர் மரணங்கள்: ”விஜய்கோ, தவெக கட்சியினருக்கோ போதிய அரசியல் அனுபவம் இல்லை” – வைகோ

post image

நண்பரின் மனைவி மறைவுக்குத் துக்கம் விசாரிப்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திண்டுக்கல் வந்திருந்தார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததை நாங்கள் வரவேற்கிறோம்.

விஜய் கரூர் பிரசாரத்திற்கு 8 மணி நேரம் தாமதமாக வந்த காரணத்தினால் மக்கள் தண்ணீர் இன்றி சோர்வடைந்து 41 பேர் உயிரிழந்துள்ளனர். தவெகவினர்தான் மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என யோசித்து இருக்க வேண்டும். கட்சியினருக்கு அரசியல் அனுபவம் இல்லை.

கட்சி கட்டமைப்பை முதலில் ஒழுங்குபடுத்த வேண்டும். கட்டமைப்பு இல்லாததால் இந்த மாதிரியான விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். திமுகவில் எம்ஜிஆர் தேர்தல் பிரசாரம் போகும் போது பின்னாலேயே சென்றுள்ளேன்.

பெரிய கூட்டம் 2 பக்கமும் ரோட்டில் விடிய விடிய படுத்து இருப்பார்கள். வேனின் மேலே ஏறி நின்று இரண்டு பக்கமும் கைகாட்டியபடியே செல்வார்.

vijay
vijay

கீழே விழுந்தார்கள் இறந்தார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் சென்றார். அவர் லட்சக்கணக்கான மக்களை ஏற்கனவே சந்தித்திருந்தார். அதுபோன்ற அனுபவம் விஜய்க்கு இல்லை. அதனால் இப்படிப்பட்ட துக்க நிகழ்வு நடந்திருக்கிறது.

கரூர் வந்த விஜய் ’காவல்துறையினரின் உரிய பாதுகாப்பு இல்லை என்றால் இந்தக் கூட்டத்திற்கு எங்களால் வந்து அடைய முடியாது. இவ்வளவு பாதுகாப்பாக அழைத்து வந்த காவல் துறையினருக்கு நன்றி சல்யூட். காவல்துறையினர்தான் எங்களைப் பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர்' என்று கூறியுள்ளார். இப்போது புதிதாக குற்றம் சொல்வதற்காகக் கூறி வருகின்றனர்” என்றார்

`ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பாஜகவின் B டீம்தான்’ - புதுச்சேரி அரசியல் நகர்வுகளை விவரிக்கும் நாராயணசாமி

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில், 200-க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களை... மேலும் பார்க்க

திண்டுக்கல்: புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநர் செல்வசேகரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநராக இருப்பவர் செல்வசேகர். திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டம் சென்னமநாயக்கன்பட்டி, ஏழுமலையான் நகரில் உள்ள வாடகை வீட... மேலும் பார்க்க

`உடலுறவும் உளவும்; தற்செயல்போல் தான் இருக்கும், ஆனால்!’ - Silicon Valley-யை பதறவைக்கும் சீனா, ரஷ்யா?

'அடுத்த தலைமுறை போர்கள் துப்பாக்கிகளாலோ, ஏவுகணைகளாலோ இருக்காது. சைபர் தாக்குதல்களும், பயோ-வெப்பன்களும் பயன்படுத்தப்படும்' எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் அமெரிக்காவுக்கு எதிர... மேலும் பார்க்க

”நெல் மூட்டை மழையில் நனைந்து முளைத்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி நாடகம் ஆடுகிறார்” - உதயநிதி காட்டம்

நெல் கொள்முதல் பணிகள் விரைவாக நடக்காததால் கொள்முதல் நிலையங்களிலும், சாலையோரங்களில் நெல்லை கொட்டிவைத்து நாள்கணக்கில் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பெய்த மழையால் பல இடங்களில் ந... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: “வயித்தெரிச்சல்ல இருக்கோம்; யார் பொய் சொல்றா?”- உதயநிதி குறிப்பிட்ட பெண் விவசாயி குமுறல்

நெல் கொள்முதலில் ஏற்பட்ட தாமதத்தால் அறுவடை செய்த நெல் மற்றும் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர் தொடர் மழையில் நனைந்ததில் முளைத்து சேதமடைந்ததாக டெல்டா விவசாயிகள் கூறி வந்தனர். இதையடுத்து கடந்த 22ம் ... மேலும் பார்க்க