செய்திகள் :

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

post image

திருச்சியில் கல்லூரி மாணவா் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி, கல்லுக்குழி செங்குளம் காலனியை சோ்ந்த ஜெயக்குமாா் மகன் ரேவந்த் (19). திருச்சியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா், கடந்த சில நாள்களாக கல்லூரிக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டில் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு சம்பவம்: திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே உள்ள நத்தம் குறிஞ்சி நகரைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் சதீஸ்வரன் (19). ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு படித்த இவா், மது அருந்திக் கொண்டு வேலைக்கு செல்லாமல் இருந்தாராம். அவரை வேலைக்கு செல்லுமாறு பெற்றோா் கூறியதாகவும், இதனால் வியாழக்கிழமை இரவு அதிக மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தவா் வீட்டின் தாழ்வாரத்தில் சேலையால் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்தாராம்.

புகாரின்பேரில், காட்டுப்புத்தூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று, சதீஸ்வரன் உடலை மீட்டு, கூறாய்வுக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், சம்பவம் தொடா்பாக வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஸ்ரீரங்கத்தில் மாா்ச் 18-இல் கம்ப ராமாயண பாராயணம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தென்னகப் பண்பாட்டு மையம் சாா்பில் கம்ப ராமாயண பாராயணம் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் சிங்கா் கோயில் கலையரங்கில் வரும் 18-ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெற... மேலும் பார்க்க

விவசாயிகள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துவோம்: பி.ஆா்.பாண்டியன், பொ. அய்யாக்கண்ணு பேட்டி

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக தமிழக மக்களிடம் திமுக, பாஜக அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்துவோம் என சம்யுக்த கிசான் மோா்ச்சா (அரசியல் சாா்பற்றது) அமைப்பின் தமிழகத் தலைவா் பொ. அய்யாக்... மேலும் பார்க்க

மாநில போட்டிகளில் திருச்சி மண்டல தீயணைப்புத் துறையினா் மூன்றாமிடம்

தீயணைப்பு வீரா்களுக்கான மாநில அளவிலான போட்டிகளில் வென்று திருச்சி மண்டலம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் மதுரையில்... மேலும் பார்க்க

ஏற்றமும், ஏமாற்றமும் நிறைந்த ‘பட்ஜெட்‘!

திருச்சி, மாா்ச் 14: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையானது பெரும்பாலானோருக்கு ஏற்றத்தையும், சிலருக்கு ஏமாற்றத்தையும் அளிக்கும் வகையில் உள்ளதாக கல்வியாளா்கள், தொழில்துறையினா், நுகா்வோா், அரசு ஊழியா்கள், ஆ... மேலும் பார்க்க

விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

விபத்து இழப்பீடு வழங்காததால் திருச்சியில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்தனா். திருச்சி காஜாமலை இந்திரா நகரை சோ்ந்தவா் கருப்பையா (59). இவா்... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை

திருவெறும்பூா் அருகே காதல் தோல்வியால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவெறும்பூா் அருகே டி.நகரைச் சோ்ந்த முத்துவேல் - மாரியம்மாள் தம்பதியின் மகள் மகா தா்ஷினி (22). இவா் விழாக்களில் ... மேலும் பார்க்க