செய்திகள் :

கல்வியை மாநில பட்டியலின்கீழ் கொண்டு வருவது அவசியம்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின்

post image

சென்னை: தேசிய கல்வி கொள்கை, நீட் தேர்வு, ஹிந்தி திணிப்பை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (ஏப். 15) சட்டப்பேரவையில் பேசினார்.

5 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, பேரவை செவ்வாய்க்கிழமை மீண்டும் காலை கூடியதும், மாநில சுயாட்சி தொடர்பான அறிவிப்புகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார்.

மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் 110-ஆவது விதியின் கீழ் அறிக்கை வெளியிட்டு வாசித்தார். அப்போது, மாநில உரிமைகளை பாதுகாக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், அவர் பேசுகையில், நீட் தேர்வால் மாணவர்கள் பலர் உயிரிழந்திருப்பதை சுட்டிக்காட்டி பேசிய முதல்வர், நாங்கள்(திமுக) இத்தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் மத்திய அரசு தமிழ்நாட்டில் ஹிந்தியை திணிக்கப் பார்ப்பதாகவும் விமர்சித்தார்.

தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பதால் தமிழ்நாட்டுக்கு ரூ.2,500 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்க மறுப்பதாக பேசிய முதல்வர், இதனையடுத்து, கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவது அவசியம் என்றும் எடுத்துரைத்தார்.

இதையும் படிக்க:மாநில உரிமைகள் மீட்டெடுக்க உயர்நிலைக் குழு: முதல்வர் அறிவிப்பு!

மாநில உரிமைகளை பாதுகாக்க அமைக்கப்படும் உயர்நிலைக் குழுவுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜோசப் குரியன் தலைமை வகிப்பார்.

பணி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அஷோக் வர்தன் ஷெட்டி (இந்திய கடல்சார் பல்கலைக்கழகக் முன்னாள் துணை வேந்தர்) மற்றும் பேராசிரியர் எம். நாகநாதன் (தமிழ்நாடு மாநில திட்ட ஆணையத்தின் முன்னாள் துணை தலைவர்) ஆகியோர் இக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வரதட்சணைப் புகார்: விசாரணைக்கு ஆஜராகாத இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் மருமகன்!

திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கி வரும் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் மகள் அளித்த வரதட்சணைப் புகாரின் கீழ், அவரது கணவர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.மேலும் இருட்டுக் க... மேலும் பார்க்க

நீட் ரத்து செய்தால் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல முடியுமா? மு.க. ஸ்டாலின் கேள்வி

தமிழக சட்டப்பேரவையில் இன்று நீட் விவகாரம் தொடர்பான விவாதம் வந்தபோது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் எழுந்தது.மத்தியில் காங்கிரஸ் உடன் திமுக... மேலும் பார்க்க

ரயில்களில் காவி நிறத்துக்கு காட்டும் ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள்! - சு.வெங்கடேசன்

காவிநிறத்துக்கு காட்டும் ஆர்வத்தை பயணிகளின் பாதுகாப்பில் காட்டுங்கள்! - சு.வெங்கடேசன்வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி பெட்டி, சாதாரண ரயில்களின் முன்பகுதி என்ஜின்களைவிட மிகவும் எடை குறைவு என்று ரயில்வே ஆண... மேலும் பார்க்க

டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு!

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய தொடா் சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை மறுநாள் தீர்ப்பளிக்கிறது.டாஸ்மாக் நிர்வாக... மேலும் பார்க்க

அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் ச... மேலும் பார்க்க

சிவாஜி இல்லத்தின் உரிமையாளர் பிரபுதான்! ஜப்தி உத்தரவு ரத்து!

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்துள்ளது.மேலும், சிவாஜியின் வீட்டில் தனக்கு உரிமையோ, பங்கோ இல்லை என்று அவரது மூத்த மகன் ராம்குமார் தாக்... மேலும் பார்க்க