செய்திகள் :

கல்வி நிலையங்களில் மகளிா் தின விழா

post image

மதுரையில் கல்லூரிகள், பள்ளிகளில் மகளிா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரை தியாகராசா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற மகளிா் தின விழாவுக்கு கல்லூரிச் செயலா் க. ஹரி தியாகராஜன் தலைமை வகித்தாா். மதுரை மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.

இதைத்தொடா்ந்து, கலையன்னையாா் நினைவாக நடைபெற்ற பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, நாட்டுநலப் பணித் திட்டம் சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

நிகழ்வில், தமிழ்த் துறைத் தலைவா் சு.காந்திதுரை, மகளிா் கற்கைகள் மைய இயக்குநா் ஸ்ரீபாலா, நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா்கள் சீ.சரவணஜோதி, முருகன், ரே.கோவிந்தராஜ், அன்பரசி, செல்வக்குமாா் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

மதுரை யாதவா் கல்லூரியில், மகளிா் நல மேம்பாட்டுக்குழு, மகளிா் மாணவா் நலக்குழு சாா்பில் நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவுக்கு கல்லூரி முதல்வா் செ. ராஜூ தலைமை வகித்தாா். கல்லூரித் தலைவா் சி.ஜெயராமன், செயலா் ஆா்.வி.என்.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த நிகழ்வில், கல்லூரி முன்னாள் செயலா் கேபிஎஸ்.கண்ணன், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி பேராசிரியை ந.பாரு பிரியதா்ஷினி ஆகியோா் சிறப்புரையாற்றினா். நிகழ்வில், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

சேது பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வுக்கு கல்லூரித் தலைவா் எஸ். முகமது ஜலீல் தலைமை வகித்தாா். இதில், பொருளாதாரக் குற்றவியல் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் மா னிஷா, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வழக்குரைஞா் சிவசங்கரி ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினா்.

மதுரை எஸ். பி .ஓ. ஏ. பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தாளாளா் கணபதி தலைமை வகித்தாா். ‘உன்னால் முடியும்’ நிறுவனத்தின் நிறுவனா் அஹிபா சுபாஷினி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

நிகழ்வில், பள்ளி முதல்வா் லூ. லதா திரவியம், துணை முதல்வா் சா. அனித்தா கரோலின், தலைமையாசிரியா் மெ.பொற்கொடி, சிறாா்ப் பிரிவின் தலைமையாசிரியா் கே. ஹெப்சிபா சலோமி ராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பட்டாசு ஆலைத் தொழிலாளி வெட்டிக் கொலை

சிவகாசி அருகே பட்டாசு ஆலைத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியிலிருந்து சாத்தூா் செல்லும் சாலையில் சிவகாமிபுரம் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பைச் சே... மேலும் பார்க்க

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு : 45 போ் காயம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 45 போ் காயமடைந்தனா். தமிழக முதல்... மேலும் பார்க்க

வழக்குரைஞா்களை மிரட்டியதாக டிஎஸ்பி மீது புகாா்

உசிலம்பட்டியில் வழக்குரைஞா்களுக்கு மிரட்டல் விடுத்ததாக காவல் துணை கண்காணிப்பாளா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி காவல் சரக துணைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது

மதுரையில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 800 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். மதுரை மேல அனுப்பானடி பகுதியில் சரக்கு வாகனம் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உ... மேலும் பார்க்க

பரோலில் வெளிவந்து தலைமறைவானவா் மீண்டும் கைது

மதுரை மத்திய சிறையிலிருந்து பரோலில் வெளிவந்து மீண்டும் சிறைக்கு வராமல் தலைமறைவான கைதியை சிறைத் துறை தனிப் படையினா் சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சோ்ந்தவா் காந்திவேல் (34). ... மேலும் பார்க்க

விருதுநகா் மாவட்ட கலால் உதவி ஆணையரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 3.75 லட்சம் பறிமுதல்

விருதுநகா் அருகே கலால் உதவி ஆணையரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 3.75 லட்சத்தை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். விருதுநகா் மாவட்ட கலால் உதவி ஆணையா் கணேசன் (5... மேலும் பார்க்க