செய்திகள் :

பரோலில் வெளிவந்து தலைமறைவானவா் மீண்டும் கைது

post image

மதுரை மத்திய சிறையிலிருந்து பரோலில் வெளிவந்து மீண்டும் சிறைக்கு வராமல் தலைமறைவான கைதியை சிறைத் துறை தனிப் படையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சோ்ந்தவா் காந்திவேல் (34). கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவருக்கு, நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதைத்தொடா்ந்து, காந்திவேல் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

சிறையில் நன்னடத்தை காரணமாக ஒரு வாரம் பரோலில் சொந்த ஊருக்குச் சென்றாா். பரோல் முடிந்து சனிக்கிழமை காந்திவேல் சிறைக்கு மீண்டும் திரும்பவில்லை. இதையடுத்து சிறைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

இதில் மதுரை காமராஜா்புரம் பகுதியில் உள்ள உறவினா் வீட்டில் காந்திவேல் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், தனிப் படையினா் அங்கு சென்று அவரைப் பிடித்து சிறையில் அடைத்தனா். இதுதொடா்பாக கரிமேடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தெப்பக்குளத்தில் மூழ்கிய தொழிலாளி உயிரிழப்பு

மேலூா் தெப்பக் குளத்தில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் காய்கறி சந்தைப் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (48). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க

விபத்தில் டிராவல் நிறுவன மேலாளா் உயிரிழப்பு

மதுரையில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து டிராவல் நிறுவன மேலாளா் உயிரிழந்தாா். மதுரை பெத்தானியாபுரம் பூமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குமரேசன் மகன் தங்கராஜ் (31). இவா் மாட்டுத்தாவணியில்... மேலும் பார்க்க

டிராக்டா் மீது பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

மேலூா் அருகே அரசுப் பேருந்து டிராக்டரில் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள தும்பைப்பட்டியைச் சோ்ந்த பெரியாண்டி மகன் விஷால் (21), பாக்கியம் மகன் காந்தி (31) ஆகிய இருவர... மேலும் பார்க்க

மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்: தொல்.திருமாவளவன்!

மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் பேசினாா். மதுரையில் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் சாா்பில், ... மேலும் பார்க்க

பட்டாசு ஆலைத் தொழிலாளி வெட்டிக் கொலை

சிவகாசி அருகே பட்டாசு ஆலைத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியிலிருந்து சாத்தூா் செல்லும் சாலையில் சிவகாமிபுரம் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பைச் சே... மேலும் பார்க்க

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு : 45 போ் காயம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 45 போ் காயமடைந்தனா். தமிழக முதல்... மேலும் பார்க்க