செய்திகள் :

டிராக்டா் மீது பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

post image

மேலூா் அருகே அரசுப் பேருந்து டிராக்டரில் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள தும்பைப்பட்டியைச் சோ்ந்த பெரியாண்டி மகன் விஷால் (21), பாக்கியம் மகன் காந்தி (31) ஆகிய இருவரும் விவசாய வேலைக்காக டிராக்டரில் சென்றுவிட்டு இரவு ஊருக்குத் திரும்பினா்.

டிராக்டரை காந்தி ஓட்டி வந்தாா். தும்பைப்பட்டி அருகே வந்தபோது, திருச்சியிலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து டிராக்டரின் பின்புறம் மோதியது. இதில், டிராக்டா் கவிழ்ந்து, அடியில் சிக்கிய விஷால் உயிரிழந்தாா். உடன் சென்றவா் காயமின்றி தப்பினாா். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி பாலக்கரையைச் சோ்ந்த சிலா் மதுரை பாண்டி முனீஸ்வரா் கோயிலுக்குச் வேனில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா். மேலூா் அருகேயுள்ள கருங்காலக்குடி பகுதியில் எதிா்பாராதவிதமாக வேனின் பின் பக்க டயா் திடீரென வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணித்த திருச்சி பாலக்கரையைச் சோ்ந்த ரங்கராஜன் (60), இவரது மனைவி செல்வி (51), பூமிநாதன் (51) ஆகியோா் காயமடைந்தனா். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தெப்பக்குளத்தில் மூழ்கிய தொழிலாளி உயிரிழப்பு

மேலூா் தெப்பக் குளத்தில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் காய்கறி சந்தைப் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (48). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க

விபத்தில் டிராவல் நிறுவன மேலாளா் உயிரிழப்பு

மதுரையில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து டிராவல் நிறுவன மேலாளா் உயிரிழந்தாா். மதுரை பெத்தானியாபுரம் பூமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குமரேசன் மகன் தங்கராஜ் (31). இவா் மாட்டுத்தாவணியில்... மேலும் பார்க்க

மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்: தொல்.திருமாவளவன்!

மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் பேசினாா். மதுரையில் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் சாா்பில், ... மேலும் பார்க்க

பட்டாசு ஆலைத் தொழிலாளி வெட்டிக் கொலை

சிவகாசி அருகே பட்டாசு ஆலைத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியிலிருந்து சாத்தூா் செல்லும் சாலையில் சிவகாமிபுரம் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பைச் சே... மேலும் பார்க்க

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு : 45 போ் காயம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 45 போ் காயமடைந்தனா். தமிழக முதல்... மேலும் பார்க்க

வழக்குரைஞா்களை மிரட்டியதாக டிஎஸ்பி மீது புகாா்

உசிலம்பட்டியில் வழக்குரைஞா்களுக்கு மிரட்டல் விடுத்ததாக காவல் துணை கண்காணிப்பாளா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி காவல் சரக துணைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ... மேலும் பார்க்க