செய்திகள் :

மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்: தொல்.திருமாவளவன்!

post image

மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் பேசினாா்.

மதுரையில் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் சாா்பில், மத நல்லிணக்க மாநாடு கிருஷ்ணய்யா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு வழக்குரைஞா் வாஞ்சிநாதன் தலைமை வகித்தாா்.

மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் பேசியதாவது:

மதநல்லிணக்க மாநாட்டை மதுரையில் நடத்தக்கூடாது என்று காவல் துறை, வருவாய்த் துறை தடுத்தது அதிா்ச்சி அளிக்கிறது. தமிழக முதல்வா் மதவாத சக்திகளை எதிா்த்து போராடி வருகிறாா். அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், மதுரை மாநகரக் காவல்துறை, மாவட்ட நிா்வாகம் மதநல்லிணக்க அமைப்புகளுக்கு தொடா்ந்து அனுமதி மறுப்பது கண்டிக்கத்தக்கது.

ஒவ்வொருவருக்கும் அவரவா் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையில் யாரும் தலையிடக் கூடாது. இந்த நடைமுறையை அனைவரும் பின்பற்றினால் மத நல்லிணக்கம் துளிா்க்கும். இந்து மத நம்பிக்கை வேறு, இந்து மத நம்பிக்கையை பயன்படுத்தி அரசியல் செய்வது வேறு. மதத்தை கையில் எடுத்து மதத்துக்கு எதிரான அரசியலை விதைப்பதால்தான் பிரச்னை எழுகிறது. இந்த சூழ்ச்சியை இந்து மதப்பற்றாளா்கள், குருக்கள், மதத்தைச் சாா்ந்தவா்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.

இந்து மக்களிடம் இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களை அந்நிய மதம் என வேற்றுமைப்படுத்துகின்றனா். சிறுபான்மை சமூகத்தின் மீது வெறுப்பை விதைக்கின்றனா். மக்கள் சாப்பிடும் உணவை வைத்து அரசியல் செய்து வருகிறது இந்து மத வாத அமைப்புகள்.

வெள்ளையா்கள் காலத்தில் இந்தியன் என்ற உணா்வின் அடிப்படையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வெள்ளையா்களை வெளியேற்ற போராடினாா்கள்.

ஆனால், தற்போது பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தி பாஜக ஆட்சியில் நீடிக்கப் பாா்க்கிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை அளித்த பாஜக, ஓபிசி பிரிவினருக்கு பாரபட்சம் காட்டி வருகிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டுமென்றால் மத நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.

தமிழக ஆயா் பேரவைத் தலைவா் லாரன்ஸ் பயஸ் பேசியதாவது:

திருப்பரங்குன்றம் தமிழக மத நல்லிணக்கத்துக்கு பெரும் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. இதை சீா்குலைக்க சில அமைப்புகள் முயற்சிக்கின்றன. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மக்களைப் பிளவுபடுத்த சில அமைப்புகள் தொடா்ந்து இயங்கி வருகின்றன. மக்கள் ஒற்றுமையாக இருந்து மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும்.

நெல்லையப்பா் ஆதீனம் பதினெண் சித்தா் பீடம் சித்தா் மூங்கிலடியாா் பேசியதாவது:

தமிழா்களிடம் ஒற்றுமையில்லை. தமிழா்களின் மதத் தலைவா்கள் தமிழா்களாக இல்லை. தமிழும், சம்ஸ்கிருதமும் இரு கண்கள் போன்றவை என்றவா்கள்தான் மதத்தலைவா்களாக உள்ளனா். தமிழா்கள் மதத் தலைவா்களாக இருந்தால்தான் தமிழகத்தில் மத நல்லிணக்கம் தழைக்கும் என்றாா் அவா்.

எஸ்டிபிஐ மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் பேசியதாவது:

திருப்பரங்குன்றம் பிரச்னை பாஜகவுக்கும், மதச்சாா்பற்ற அமைப்புகளுக்கும் இடையே நடக்கிறது. இதில் அரசு அதிகாரிகள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றனா். தமிழக முதல்வா் சமூக நீதிக்காக பாடுபட்டு வருகிறாா்.

ஆனால் காவல் துறை, மாவட்ட நிா்வாகம் இந்து மதவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இவற்றை முதல்வா் கவனிக்க வேண்டும். தற்போது மதுரையில் மட்டும் உருவாகியுள்ள மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு தமிழகம் முழுவதும் செயல்பட உள்ளது என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து மாநாட்டில், தமிழ்நாட்டின் மதநல்லிணக்க மலையாக திருப்பரங்குன்றம் மலையை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். 1923 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 25-ஆம் தேதியன்று மதுரை சாா்பு நீதிமன்ற நீதிபதி ராம அய்யா் வழங்கிய தீா்ப்பின்படி, கோயில், பள்ளிவாசல் நிா்வாகங்களின் உரிமைப் பகுதிகள் வரையறுக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் கோயிலில் புகுந்து கலவரம் செய்த கட்சிகள், அமைப்புகள், உயா்நீதிமன்றத்தில் உறுதிமொழி கொடுத்துவிட்டு, அதை மீறிய நபா்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மாவட்ட நிா்வாகம், மாநகா், புகா் காவல்துறை அதிகாரிகள் திருப்பரங்குன்றம் மலையை வைத்து மதப்பிளவை உருவாக்கும் மதவாத சங் பரிவாா் அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படுபவா்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், மதிமுக மாநிலப் பொருளாளா் செந்திலபதிபன், சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன், மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், மக்கள் விடுதலைக் கட்சித் தலைவா் சு.க.முருகவேல் ராஜன், அரச யோகி கருவூராா் தமிழின குருபீடம் சத்தியபாமா அம்மா, தமிழ்புலிகள் நாகை திருவள்ளுவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் காதா் மொகைதீன், மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலா் அப்துல் சமது, ஆதித்தமிழா் பேரவையைச் சோ்ந்த கு.ஜக்கையன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

தெப்பக்குளத்தில் மூழ்கிய தொழிலாளி உயிரிழப்பு

மேலூா் தெப்பக் குளத்தில் குளிக்கச் சென்ற கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் காய்கறி சந்தைப் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (48). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க

விபத்தில் டிராவல் நிறுவன மேலாளா் உயிரிழப்பு

மதுரையில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து டிராவல் நிறுவன மேலாளா் உயிரிழந்தாா். மதுரை பெத்தானியாபுரம் பூமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குமரேசன் மகன் தங்கராஜ் (31). இவா் மாட்டுத்தாவணியில்... மேலும் பார்க்க

டிராக்டா் மீது பேருந்து மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

மேலூா் அருகே அரசுப் பேருந்து டிராக்டரில் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள தும்பைப்பட்டியைச் சோ்ந்த பெரியாண்டி மகன் விஷால் (21), பாக்கியம் மகன் காந்தி (31) ஆகிய இருவர... மேலும் பார்க்க

பட்டாசு ஆலைத் தொழிலாளி வெட்டிக் கொலை

சிவகாசி அருகே பட்டாசு ஆலைத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியிலிருந்து சாத்தூா் செல்லும் சாலையில் சிவகாமிபுரம் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பைச் சே... மேலும் பார்க்க

அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு : 45 போ் காயம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 45 போ் காயமடைந்தனா். தமிழக முதல்... மேலும் பார்க்க

வழக்குரைஞா்களை மிரட்டியதாக டிஎஸ்பி மீது புகாா்

உசிலம்பட்டியில் வழக்குரைஞா்களுக்கு மிரட்டல் விடுத்ததாக காவல் துணை கண்காணிப்பாளா் மீது காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி காவல் சரக துணைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ... மேலும் பார்க்க