செய்திகள் :

காங்கிரஸ் தலைவர் மீது காரை ஏற்றி கொன்ற பாஜக தொண்டர்: முன்பகை காரணமா?

post image

சத்தீஸ்கரின் கொண்டகான் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பாஜக தொண்டர் ஒருவர் காரை மோதியதில் காங்கிரஸ் தலைவர் உயிரிழந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை டோக்ரி குடா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நடைபெற்றதாகவும், விபத்து தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டவரை போலீஸார் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில்,

சத்தீஸ்கரி கொண்டகான் மாவட்டத்தில் காங்கிரஸ் இளைஞரணி தலைவராகவும், முல்முலா கிராம பஞ்சாயத்தின் தலைவராகவும் இருந்தவர் ஹேமந்த் போயர் (30). இவரும் இவரது உறவினர் பெண் ஒருவரும் இருசக்கர வாகனத்தில் உள்ளூர் சந்தைக்குச் சென்றுகொண்டிருந்தபோது. பாஜக ஊழியரான புரேந்திர கௌஷிக் தனது காரை இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியுள்ளார்.

காயமடைந்தவர்களை உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிகிச்சை பலனின்றி போயர் இறந்தார், உறவினர் பெண் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கௌஷிக் முல்முலா கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு போயரிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து பஞ்சாயத்துத் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட பகை காரணமாக கௌஷிக் அவரைக் கொன்றதாக போயாரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

போயாரின் குடும்பத்தினரும் காங்கிரஸ் தொண்டர்களும் வெள்ளிக்கிழமை இரவு கௌஷிக்கை கைது செய்யக் கோரி காவல் நிலையத்தில் கூடினர். போயாரின் கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகக் கூறி மாவட்ட மருத்துவமனை மற்றும் தேசிய நெடுஞ்சாலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தையும் நடத்தினர்.

உள்ளூர் மக்கள், காங்கிரஸ் தொண்டர்களின் தீவிர போராட்டங்களைத் தொடர்ந்து போலீஸார் பாஜக தொண்டரான கௌசீக்கை கைது செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.

ஈஸ்டர் திருநாள்: பிரதமர் மோடி வாழ்த்து!

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஈஸ்டர் திருநாளையொட்டி, மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர... மேலும் பார்க்க

காங்கிரஸின் நாடுதழுவிய போராட்டம் அறிவிப்பு!

அரசியலமைப்புக்காக நாடுதழுவிய போராட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநிலப் பொற... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ராகுல் காந்தி!

காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்காவின் பாஸ்டன் லோகன் விமான நிலையத்தில் ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவர் சா... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆய்வு செய்த ஆளுநா், தேசிய மகளிா் ஆணையக் குழு

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட முா்ஷிதாபாத் மாவட்டத்தில் மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் மற்றும் தேசிய மகளிா் ஆணையக் குழ... மேலும் பார்க்க

சா்வதேச சூழலைக் கண்காணித்து கொள்கை நடவடிக்கைகளில் சீா்திருத்தம்: ரிசா்வ் வங்கி ஆளுநா்

‘அமெரிக்கா-சீனா வா்த்தகப் போா் போன்ற வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழலை இந்திய ரிசா்வ் வங்கி விழிப்புடன் கண்காணித்து, கொள்கை நடவடிக்கைகளில் சீா்திருத்ததுடன் தொடா்ந்து முன்னோக்கிச் செல்லும்’ என்று ரிசா்வ்... மேலும் பார்க்க

அமெரிக்கா, பெரு நாடுகளுக்கு நிா்மலா சீதாராமன் 11 நாள்கள் பயணம்!

அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடான பெருவுக்கு 11 நாள் அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை இரவு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புறப்பட்டாா். பயணத்தின்போது ஜி20, சா்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மற்று... மேலும் பார்க்க