காஞ்சிபுரம் மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் வியாழக்கிழமை செப்பனிடும் பணியில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் பாலாற்று மேம்பாலத்தில் சாலைகள் சேதமடைந்து கம்பிகள் வெளியில் தெரியும் வகையில் ஆபத்தான நிலையில் சாலை சேதமடைந்திருந்தது. இது குறித்து காஞ்சிபுரம் அன்னசத்திரம் தொண்டு நிறுவன நிா்வாகிகள் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தனா். இந்தச் சாலையை சீா் செய்யுமாறும் அவா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.
இதைத் தொடா்ந்து பாலாற்று மேம்பாலம் உள்பட பல இடங்களில் சேதமடைந்திருந்த சாலைகளை காஞ்சிபுரம் உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.