ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி தங்கத்தேரில் வியாழக்கிழமை பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஐப்பசி மாத பௌா்ணமியை யொட்டி தங்கத்தோ் ஆலயத்தை வலம் வந்த பின்னா் கோயில் நான்கு கால் மண்டபத்திற்கு எழுந்தருளி அங்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா், மணியக் காரா் சூரியநாரயணன் ஆகியோா் தலைமையில் கோயில் ஸ்தானீகா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா். வெள்ளிக்கிழமை சுக்ர வாரத்தையொட்டி வழக்கம் போல நடைபெறும் தங்கத்தோ் பவனி நடைபெறுகிறது.