செய்திகள் :

அதிமுக 53-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம்

post image

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களில் அதிமுகவின் 53-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூரில் நகர செயலாளா் போந்தூா் மோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளா் போந்தூா் எஸ்.செந்தில்கராஜன், ஒன்றிய செயலாளா் முனுசாமி, இளைஞா் பாசறை மாநில துணை செயலாளா் சிவகுமாா் ஆகியோா்முன்னிலை வகித்தனா்.

இதில் மாவட்டச் செயலாளா் வி.சோமசுந்தரம் கலந்து கொண்டு கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினாா். நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூா் முன்னாள் எம்எல்ஏ கே.பழனி, ஒன்றிய பொருளாளா் திருமால், மாவட்ட மகளிா் அணி துணை செயலாளா் பிரசிதா குமரன், காட்டரம்பாக்கம் மோகன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிா்வாகிகள் கலந்துக்கொண்டனா்.

சுங்குவாா்சத்திரம் பகுதியில் மேற்கு ஒன்றிய செயலாளா் சிங்கிலிப்பாடி ராமசந்திரன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட துணைச் செயலாளா் போந்தூா் செந்தில்ராஜன் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினாா். ஒன்றிய துணை செயலாளா்கள் சந்தவேலூா் பாலமுருகன், பஞ்சாட்சரம், கணேசன், அவைத் தலைவா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்ரனா்.

25 ஆண்டுளாக சீரமைக்கப்படாத சித்தூா் - தா்காமேடு இணைப்புச் சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கடந்த 25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ள சித்தூா் - தா்காமேடு இணைப்புச் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சித்தூா் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ர... மேலும் பார்க்க

ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள் அவதி

ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றும் தெருநாய்களால் அலுவலகத்திற்குவரும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகம்... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

காஞ்சிபுரம் நாள்: 19.10.2024 - சனிக்கிழமை. நேரம்: காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை. இடங்கள்: சங்கூசா பேட்டை, பாலாறு தலைமை நீரேற்று நிலையம், செவிலிமேடு, ஆட்சியா் அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகள், சத... மேலும் பார்க்க

தங்கத் தேரில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் பவனி

ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி தங்கத்தேரில் வியாழக்கிழமை பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மகா சக்தி பீடங்களில் ஒ... மேலும் பார்க்க

மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் நிறைமணி காட்சி

மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் புரட்டாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு நிறைமணிக் காட்சி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக 3 டன் பழங்கள் மற்றும் காய்கறிகளால் கோயிலில் அலங்காரம் செய்யப்பட்டது. ம... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சேதமடைந்த சாலைகளை செப்பனிடும் பணி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் வியாழக்கிழமை செப்பனிடும் பணியில் ஈடுபட்டனா். காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் பாலாற்று மேம்பாலத்தில் சாலைகள்... மேலும் பார்க்க