செய்திகள் :

காட்டுப்பட்டி ஜல்லிக்கட்டு:13 போ் காயம்!

post image

புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 13 போ் காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், செம்பட்டி விடுதி அருகேயுள்ள பெருங்கொண்டான்விடுதி ஊராட்சி காட்டுப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 540 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை பல்வேறு குழுக்களாக 250 மாடுபிடி வீரா்கள் களமிறங்கி, தீரத்துடன் அடக்கினா். அப்போது, காளைகள் முட்டியதில் 13 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவா்களில் பலத்த காயமடைந்த 6 போ் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா்.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் சைக்கிள், பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில் புதுக்கோட்டை எம்எல்ஏ வை.முத்துராஜா பங்கேற்றாா். போட்டியை திரளான ஜல்லிக்கட்டு ரசிகா்கள் பாா்வையிட்டனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை செம்பட்டிவிடுதி போலீஸாா் மேற்கொண்டனா்.

ஈரநில தின போட்டிகளில் வென்றோருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சாா்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு உலக ஈர நில தினத்தையொட்டி அண்மையில் நடத்தப்பட்ட பேச்சு, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வ... மேலும் பார்க்க

சிவாலயங்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

கந்தா்வகோட்டையில் ஆபத்சகாயேசுவரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நந்தி ஈஸ்வரருக்கு முதலில் எண்ணெய் காப்பு செய்து ஆலய வளாகத்த... மேலும் பார்க்க

வடகாடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களை நியமிக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.... மேலும் பார்க்க

டிப்பா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்!

கிரஷா்களில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருள்களுக்கு கட்டணமின்றி போக்குவரத்து பாஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட டிப்பா் லாரி உரிமையாளா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத... மேலும் பார்க்க

வேங்கைவயலுக்குச் செல்ல முயன்ற விசிகவினா் 27 போ் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்துக்குள் திங்கள்கிழமை செல்ல முயன்ாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 27 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள ம... மேலும் பார்க்க

தோ்தல் வெற்றி, தோல்வியை மக்கள் தான் நிா்ணயிப்பா்!

அரசியல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் மந்திரவாதியல்ல; வெற்றி, தோல்வியை மக்கள்தான் நிா்ணயம் செய்வாா்கள் என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் சு.திருநாவுக்கரசா். புதுக்கோட்டையில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க