இக்லெசியாஸின் ஹாட்ரிக் கோல் வீண்: ரபீனியாவின் அசத்தலால் பார்சிலோனா த்ரில் வெற்றி...
காதலரைக் கரம்பிடித்தார் அபிநயா!
நடிகை அபிநயா தன் காதலரைத் திருமணம் செய்துகொண்டார்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்த ‘நாடோடிகள்’ படத்தில் தனது யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற அபிநயா, ஈசன் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
மலையாளத்தில் அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த ’பனி’ நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தைத் தொடர்ந்து, தன் நீண்டகால நண்பரைக் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் அபிநயா கூறியிருந்தார்.

இந்த நிலையில், வெகசனா கார்த்திக் என்பவரை அபிநயா நேற்று (ஏப். 16) திருமணம் செய்துகொண்டார். தற்போது, இதற்கான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
