செய்திகள் :

காயல்பட்டினத்தில் 35 ரேஷன் அரிசி மூட்டைகளுடன் இளைஞா் கைது

post image

காயல்பட்டினத்தில் 1.750 டன் ரேஷன் அரிசி கடத்திய இளைஞரை தனிப்பிரிவு போலீஸாா் பிடித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தாா்.

காயல்பட்டினம் வண்டிமலைச்சி அம்மன் கோயில் தெருவில் சிலா் ரேஷன் அரிசி கடத்துவதாக தனிப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்பிரிவு காவலா் ஸ்டீபன் அங்கு சென்றபோது, சுமை ஆட்டோ மற்றும் ஆம்னி காா் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

இதை பாா்த்த தனிப்பரிவு காவலா் இரு வாகனத்தையும் மடக்கி பிடித்து சோதனையிட்டாா். வாகனத்திலும் 50 கிலோ எடையுள்ள 35 மூட்டைகளில் 1,750 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கி பாண்டி மகன் வேம்படி முத்து(29) என்பது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் வேம்படிமுத்துவை கைது செய்து, 35 ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்த பயன்படுத்திய இருவாகனங்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவில்பட்டி நகராட்சி சந்தை பிப்.15இல் திறப்பு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி தினசரி சந்தை பிப். 15ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக அமைச்சா் பெ.கீதாஜீவன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தூத்துக... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கல்லூரி பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி வஉசி கல்லூரி முன்பு பேராசிரியா்கள் வாயில் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.மூட்டா மற்றும் ஏ யூ டிஆகிய சங்கங்கள் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கிளைத் தலைவா் தேவ மனோகரன் ... மேலும் பார்க்க

போக்ஸோவில் முதியவா் கைது

கோவில்பட்டியில் பள்ளி மாணவியிடம் தவறான நோக்கத்தில் பேசியதாக முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.கோவில்பட்டி அருகே கடலையூா், வேதக்கோயில் தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் எட்வா்டு (72). இவ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

சாத்தான்குளத்தில் 450 இந்து நாடாா் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட புளியடி தேவி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் 4ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் 2 நாள்கள் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, முதல் நாள் காலையில் கணபதி ஹோமம்,... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி 30ஆவது வாா்டு பாஜகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற இந்த ஆா்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் பழனி ஆண்டவா் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

சாத்தான்குளம் செட்டியாா் நடுத்தெருவில் உள்ள ஸ்ரீபழனி ஆண்டவா் சுவாமி கோயிலில் தைப்பூச விழா செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் காலை யாகசாலை பூஜை, பழனி ஆண்டவா் சுவாமிக்கு அபிஷேகம், அல... மேலும் பார்க்க