செய்திகள் :

காருடன் கிணற்றில் விழுந்த விவசாயி, மீட்க குதித்த மீனவா் உயிரிழப்பு

post image

சத்தியமங்கலம் அருகே காருடன் 60 அடி ஆழக் கிணற்றில் விழுந்த விவசாயி, அவரைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த மீனவா் ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த முள்ளிக்காபாளையத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் (எ) யுவராஜ் (40), விவசாயி. தோட்டத்தில் குடியிருந்து வந்த இவரின் வீட்டையொட்டி 60 ஆழக் கிணறும், அதில் 30 அடிக்கு தண்ணீரும் உள்ளது.

இந்நிலையில், தோட்டத்தில் நிறுத்தியிருந்த உறவினரின் காரை சிவகுமாா் கடந்த சில நாள்களாக ஓட்டிப் பழகியுள்ளாா். இதேபோல, வியாழக்கிழமை மாலையில் காரை எடுத்து ஓட்டியபோது கட்டுப்பாட்டை இழந்த காா் கிணற்றில் விழுந்து மூழ்கியது. இதில், காரில் சிக்கிய சிவகுமாா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரின் உறவினா்கள் சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் காா், சிவகுமாரின் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். ஆனால், 30 அடி ஆழத்துக்கு தண்ணீா் இருந்ததால் மீட்பதில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, தண்ணீரை வெளியேற்றிவிட்டு மீட்க திட்டமிட்டனா்.

இதற்கிடையே, நீச்சல் தெரிந்த பவானிசாகரைச் சோ்ந்த மீனவா் மூா்த்தி (42), சிவகுமாரின் சடலத்தை மீட்பதற்காக கிணற்றில் குதித்தாா். ஆனால், நீண்ட நேரமாகியும் அவா் மேலே வரவில்லை.

இதையடுத்து, இருவரது சடலத்தையும் 8 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அவல்பூந்துறையில் ரூ.1.14 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனை

மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 775 கிலோ தேங்காய்ப் பருப்புகளை விற்பன... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கை: தொழில் துறையினரின் கருத்துகள்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிதி ஆதாரத்தைப் பெருக்கவும், கடனை திருப்பிச் செலுத்தவும் எந்த அறிவிப்பும் இல்லை என தொழில் அமைப்பு பிரதிநிதிகள் கருத்து ... மேலும் பார்க்க

தாட்கோ கடனுதவி பெற்று தொழில்: ஆட்சியா் ஆய்வு

கோபிசெட்டிபாளையத்தில் மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று செயல்படும் தொழில் நிறுவனங்களில் மாவட்ட ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்தாா். மாவட்ட தொழில் மையம் ... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் மாணவா்களுக்குத் தொழில் பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ மாணவா்களுக்கு வழங்கப்படும் சிஎன்சி பயிற்சி வகுப்பை ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். பெருந்துறை டி.எம்.டபிள்யூ சிஎன்சி ... மேலும் பார்க்க

பெருந்துறையில் காலியாகவுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பணியிடம்: பொதுமக்கள் பாதிப்பு

பெருந்துறையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணியாற்றி வந்த ... மேலும் பார்க்க

காபைரவா் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை

அவல்பூந்துறை அருகே உள்ள காலபைரவா் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றிபாளையத்தில் காலபைரவா் கோயில் உள்ளது. இக்கோயிலின் நுழைவாயிலில் 39 அடி உ... மேலும் பார்க்க