முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆக. 3-இல் ஒரே கட்டமாக ‘நீட்’ தோ்வு: தேசிய மர...
காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் ஜூன் 10- இல் மின் தடை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காரைக்குடி, அமராவதிபுதூா் துணை மின் நிலையங்களில் வருகிற செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே, காரைக்குடி நகா் பகுதிகள், பேயன்பட்டி, வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், செக்காலைக்கோட்டை, பாரிநகா், கல்லூரிச் சாலை, செக்காலைச் சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், செஞ்சை, கோவிலூா் சாலை.
அமராவதிபுதூா், ஐ.டி.ஐ. வளாகம், தேவகோட்டை சாலை, சங்கராபுரம், ஆறாவயல், தானாவயல், வேட்டைக்காரன்பட்டி, எஸ்.ஆா். பட்டணம், கல்லுப்பட்டி, சாத்தம்பத்தி, ஊகம்பத்தி, சிஐஎஸ்எப் வளாகம், ஜமீன்தாா் குடியிருப்பு, மானகிரி, ரஸ்தா, கோவிலூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.