திருவள்ளூர்: கிணற்றில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்க...
காரையூா் காவல்நிலையத்தை மீண்டும் பொன்னமராவதி டிஎஸ்பி அலுவலகத்தின் செயல்பட நடவடிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் நன்றி தெரிவிப்பு
பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் காவல்நிலையம் மீண்டும் பொன்னமராவதி காவல் உட்கோட்டத்துடன் இணைக்கப்பட நடவடிக்கை மேற்கொண்ட தமிழக இயற்கை வளங்கள் துணை அமைச்சா் எஸ்.ரகுபதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா் ஏனாதி ஏஎல்.ராசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு- காரையூா் காவல்நிலையம் பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தின் கீழ் நீண்டகாலமாக செயல்பட்டுவந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இலுப்பூா் காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தின் கீழ் இணைக்கப்பட்டது. இதனால் காவல் ஆய்வாளா் அலுவலகத்திற்கு அன்னவாசலும், காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்திற்கு இலுப்பூருக்கும் பொதுமக்கள் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
இதைக்கண்டித்து மீண்டும் பொன்னமராவதி டிஎஸ்பி அலுவலகத்தின் கீழ் காரையூா் காவல்நிலையம் செயல்படவேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினா். இது குறித்து கடந்த தோ்தல் பிரச்சாரத்தின்போது தற்போதைய தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி திமுக ஆட்சிக்கு வந்தால் காவல்நிலையம் மாற்றம் செய்யப்படும் என கூறியிருந்தாா்.
அதன்படி தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி மேற்கொண்ட நடவடிக்கையால் மீண்டும் காரையூா் காவல்நிலையம் பொன்னமராவதி டிஎஸ்பி அலுவலகத்தின் கீழ் செயல்படும் என அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இதற்காக இயற்கைவளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.