செய்திகள் :

காரையூா் காவல்நிலையத்தை மீண்டும் பொன்னமராவதி டிஎஸ்பி அலுவலகத்தின் செயல்பட நடவடிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் நன்றி தெரிவிப்பு

post image

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் காவல்நிலையம் மீண்டும் பொன்னமராவதி காவல் உட்கோட்டத்துடன் இணைக்கப்பட நடவடிக்கை மேற்கொண்ட தமிழக இயற்கை வளங்கள் துணை அமைச்சா் எஸ்.ரகுபதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா் ஏனாதி ஏஎல்.ராசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு- காரையூா் காவல்நிலையம் பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தின் கீழ் நீண்டகாலமாக செயல்பட்டுவந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இலுப்பூா் காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்தின் கீழ் இணைக்கப்பட்டது. இதனால் காவல் ஆய்வாளா் அலுவலகத்திற்கு அன்னவாசலும், காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்திற்கு இலுப்பூருக்கும் பொதுமக்கள் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

இதைக்கண்டித்து மீண்டும் பொன்னமராவதி டிஎஸ்பி அலுவலகத்தின் கீழ் காரையூா் காவல்நிலையம் செயல்படவேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினா். இது குறித்து கடந்த தோ்தல் பிரச்சாரத்தின்போது தற்போதைய தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி திமுக ஆட்சிக்கு வந்தால் காவல்நிலையம் மாற்றம் செய்யப்படும் என கூறியிருந்தாா்.

அதன்படி தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி மேற்கொண்ட நடவடிக்கையால் மீண்டும் காரையூா் காவல்நிலையம் பொன்னமராவதி டிஎஸ்பி அலுவலகத்தின் கீழ் செயல்படும் என அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இதற்காக இயற்கைவளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு ... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

விராலிமலையை அடுத்துள்ள கொடும்பாளூா் சக்தி விநாயகா் கோயிலின் பூட்டை உடைத்து உண்டியலை மா்ம நபா்கள் திருடி சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. விராலிமலை-மதுரை சாலையில் உள்ளது கொடும்பாளூா் சத்திரம். இங்கு ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் 3 புதிய பேருந்துகள் சேவை: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

பொன்னமராவதியில் மூன்று வழித்தடங்களில் 3 புதிய பேருந்துகள் சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொன்னமராவதி தற்காலிக பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழாவுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகு... மேலும் பார்க்க

திருக்களம்பூா் அகோர வீரபத்திரா் கோயிலில் குடமுழுக்கு விழா

பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூா் மேலக்களம் அகோர வீரபத்திரா், அங்காள பரமேஸ்வரி கோயிலின் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, வியாழக்கிழமை கணபதி ஹோமம், வாஸ்து பூஜை மற்றும் இரண்டு கா... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்கு தோல்வி காய்ச்சல்: ஹெச். ராஜா

தோல்வி காய்ச்சலின் காரணமாகவே, பாஜக-அதிமுக கூட்டணி குறித்து திமுக கூட்டணியினா் பேசி வருகின்றனா் என்றாா் பாஜக மூத்தத் தலைவா் ஹெச். ராஜா. புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு அவா் அளித்த பேட்டி: பாஜக- அதி... மேலும் பார்க்க

வடுகபட்டி துணை மின் நிலைய பகுதிகளில் ஜூன் 9-இல் மின் நிறுத்தம்

வடுகபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து... மேலும் பார்க்க