செய்திகள் :

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி கிராம சுகாதார செவிலியா்கள் உண்ணாவிரதம்

post image

துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 3,800 கிராம சுகாதார செவிலியா்கள் பணியிடங்களை நிரப்பக் கோரி, தமிழக அரசு அனைத்து சுகாதார செவிலியா்கள் சங்கத்தினா் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

சென்னை எழும்பூா், ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியா்கள் கூறியதாவது:

கிராம சுகாதார செவிலியா்கள் நியமனம் தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவந்து 3,800-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், கிராம சுகாதார செவிலியா்கள் மேற்கொள்ளும் பணிகளை இணையவழியே வேறொருவா் மேற்கொள்வதாக சித்திரிக்கக் கூடாது.

தமிழகத்தில் தடுப்பூசி மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. அதற்கு அரசு உரிய தீா்வு காண வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான வாடகையை மருத்துவ அலுவலா்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்வதில்லை. ஆனால், அரசு துணை சுகாதார நிலையங்களின் வாடகையை கிராம சுகாதார செவிலியா்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்கின்றனா். இதனால் எங்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது. இந்த நடைமுறையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்தனா்.

பிரபல சின்ன திரை நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, நித்யா மேனன்!

பிரபல சின்ன திரை நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுள்ளனர்.விஜய் தொலைக்காட்சியில் ஆடல், பாடல் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும், நீயா நான... மேலும் பார்க்க

தமிழகத்தைப் பற்றி ஸ்டாலின் முதலில் கவலைப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் முதலில் கவலைப்பட வேண்டும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி வருகை முன்னிட்டு நெல்லை மகாராஜா நகரில் உள்ள பாஜ... மேலும் பார்க்க

ஆரம்பாக்கம் பாலியல் வன்கொடுமை: கைதானவரின் விவரங்கள் வெளியாகின!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரின் விவரங்கள் வெளியாகியுள்ளது.ஆரம்பாக்கத்தில், சிறுமி பாலியல்... மேலும் பார்க்க

நீலகிரி, கோவைக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு தாண்டி அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நில... மேலும் பார்க்க

பருவ காலங்களை கணிக்கும் செயற்கைக்கோள்: ஜூலை 30ல் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர்

மழைக்காலம் மற்றும் பருவ காலங்களில் மேகமூட்டங்கள் எவ்வளவு இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய விஷயங்களை தெளிவாக புகைப்படம் எடுக்க உதவும் புதிய செயற்கைக்கோள், ஜூலை 30 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ... மேலும் பார்க்க

பொதுப்பணித் துறை சாதனைகள்: தமிழக அரசு விளக்கம்!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் பொதுப்பணித் துறையின் சாதனைகளாக கட்டடக்கலை மாட்சியைப் புலப்படுத்தும் எழில்மிகு கட்டடங்கள் அமைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள... மேலும் பார்க்க