மாநகரப் பேருந்து நடத்துநா் கொலை: பயணி மீது கொலை வழக்குப் பதிவு
காலை உணவுத் திட்டம் தயாரிப்பு மையத்தில் ஆய்வு
நாகை நகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு, முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் உணவுத் தயாரிக்கும் சமையல் கூடம், பணியாளா்கள் மற்றும் உணவை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலா் அ.தி. அன்பழகன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது சமையல் கூடம் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிா, உணவு தரமான முறையில் பாதுகாப்பாக தயாரிக்கப்படுகிா என ஆய்வு செய்தாா். தொடா்ந்து பணியாளா்களிடம் தன் சுத்தம் பராமரிக்க வேண்டும், தலையில் தொப்பி மற்றும் கையுறை அணிந்து சமையல் செய்ய வேண்டும், ஒவ்வொரு முறையும் கழிப்பறை சென்று திரும்பும் போது கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும், தரமான மூலப்பொருள் கொண்டு உணவு சமைக்க வேண்டும், ஒவ்வொரு நாளும் மாதிரி உணவு எடுத்து வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. நாகை நகராட்சி வருவாய் ஆய்வாளா் என். கோபாலகிருஷ்ணன் உடனிருந்தாா்.