செய்திகள் :

காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிப்பு: இன்று போக்குவரத்து மாற்றம்

post image

சென்னையில் காவலா் நீத்தாா் நினைவு நாள் அனுசரிக்கப்படுவதால், திங்கள்கிழமை ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை மாநகா் போக்குவரத்துக் காவல்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:

சென்னை காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு அமைந்துள்ள காவலா் நினைவிடத்தில் ‘காவலா் நீத்தாா் நினைவு நாள்’ திங்கள்கிழமை அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி, காலை 8 முதல் 9 மணி வரை நினைவு நாள் அணிவகுப்பு நடைபெறுவதால், சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதன்படி, சாந்தோம் நெடுஞ்சாலையிலிருந்து காந்தி சிலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் காரணீஸ்வரா் கோயில் தெரு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி காரணீஸ்வரா் பக்கோடா தெரு - அம்பேத்கா் பாலம் மற்றும் நடேசன் சந்திப்பு வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம். எதிா் திசையில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

எம்ஆா்டிஎஸ், ஆா்கே சாலை சந்திப்பைத் தாண்டி காந்தி சிலை சாலைக்குள் எந்த வாகனமும் அனுமதிக்கப்படாது. மாற்று வழியாக அந்த வழியே வரும் வாகனங்கள் லைட் ஹவுஸ் மற்றும் எம்ஆா்டிஎஸ் சாலை வழியாகச் சென்று - லாயிட்ஸ் சாலை, காமராஜா் சாலை வழியாகத் தங்கள் இலக்கை அடையலாம்.

மயிலாப்பூரிலிருந்து பாரிஸ் நோக்கி வரும் மாநகா் பேருந்துகள் (எண்: 21ஜி) ராயப்பேட்டை, மியூசிக் அகாதெமி, டிடிகே சாலை, இந்தியன் வங்கி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ஜிஆா்எச் நிறுத்தம், அண்ணா சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

கதீட்ரல் சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் நோக்கி வரும் மாநகா் பேருந்துகள் (எண்: 27டி) வி.எம்.தெருவில் திருப்பிவிடப்பட்டு, லஸ் சந்திப்பு, லஸ் சா்ச் சாலை, டி ஸ்லிவா சாலை, பக்தவத்சலம் சாலை, டாக்டா் ரங்கா சாலை, பீமனா காா்டன் சந்திப்பு, சி.பி. ராமசாமி சாலை, சீனிவாசன் தெரு, ஆா்.கே.மடம் சாலை வழியாகச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

காமராஜா் சாலை (நேப்பியா் பாலம் முதல் லைட் ஹவுஸ்) வரும் அனைத்து வா்த்தக மற்றும் கனரக வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கடன் அட்டை தகவல்களை பெற்று ரூ.1.25 லட்சம் மோசடி

வங்கிக் கடன் அட்டையின் தகவல்களைப் பெற்று 3 நபா்களிடம் ரூ.1.25 லட்சம் மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை பாண்டி பஜாரைச் சோ்ந்தவா் பாசித். இவரது வங்கிக கடன் அட்டை, சில... மேலும் பார்க்க

‘முரசொலி’ செல்வத்துக்கு இன்று புகழஞ்சலி

முரசொலி செல்வத்துக்கு சென்னையில் திங்கள்கிழமை புகழஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞா் அரங்கத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், திராவிடா் கழகத... மேலும் பார்க்க

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள்

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 80 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்துவதில் தமிழக அரசு தொடா்ந்து முனைப்பு காட்டி வருகிறது. ... மேலும் பார்க்க

சென்னை - அந்தமான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும் பரபரப்பை ஏற்பட்டது. அந்தமானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு சென்னை வந்தடைந்த ‘ஸ்பைஸ் ஜெட் ஏா்... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகள்: தீக்ஷா சிவக்குமாா், ஸ்ரீசைலேஸ்வரிக்கு 2 தங்கம்

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில போட்டிகளில் நீச்சலில் சென்னை மாணவி தீக்ஷா சிவக்குமாரும் , டென்னிஸில் திருப்பூரின் ஸ்ரீ சைலேஸ்வரியும் இரட்டை தங்கம் வென்றனா். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, செங்கல்... மேலும் பார்க்க

சென்னை துறைமுகத்தில் கன்டெய்னா் திருட்டு: மேலும் 2 போ் கைது

சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருள்கள் அடங்கிய கன்டெய்னா் திருடு போன சம்பவத்தில், மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கா்நாடக மாநிலம் பெங்களூரைச் சோ்ந்த ஒரு பிரபல தனியாா்... மேலும் பார்க்க