செய்திகள் :

காஷ்மீரில் 3 மாத விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு!

post image

காஷ்மீரில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த காஷ்மீரில் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

காஷ்மீரில் நிலவிவந்த அதீத குளிர் காரணமாக கடந்த மூன்று மாதங்களாகப் பள்ளிகளுக்குக் குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மார்ச் 1ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டிருந்தன, ஆனால் மோசமான வானிலை காரணமாக மேலும் விடுமுறையை ஒரு வாரக் காலம் நீட்டித்தது அரசு.

இதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் செயல்படும் சுமார் 10,000 அரசு மற்றும் தனியார் நடத்தும் பள்ளிகள் இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதற்கு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் சகினா இட்டூ வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மூன்று மாத குளிர்கால விடுமுறைக்குப் பிறகு மாணவர்கள் மீண்டும் பள்ளிகளில் சேருவதால், அவர்களது எதிர்காலம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

குறிப்பாகக் கற்பிக்கும் ஆசிரியர்களை நான் பாராட்டுகிறேன், இதை மறக்கமுடியாத, வெற்றிகரமான ஆண்டாக மாற்றுவதற்கு நன்றி என்று அவர் கூறினார்.

மணிப்பூரில் காலவரையற்ற வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மணிப்பூரில் குகி மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குகி மக்கள் அதிகம் உள்ள பகுதிகள... மேலும் பார்க்க

3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!

இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் 3-ஆவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த தம்பதிக்கு ரூ.50,000 வெகுமதி வழங்குவேன் என்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் ஆந்திர பிரதேச எம்.பி. அப்பாலநாயுடு. ஆந்திர பிர... மேலும் பார்க்க

ராகுலின் உதவியால் தொழிலதிபராகும் செருப்புத் தைக்கும் தொழிலாளி!

ராகுல் காந்தியின் உதவியால் புதிய காலணி பிராண்டைத் தொடங்கவுள்ள செருப்புத் தைக்கும் தொழிலாளியை பலரும் பாராட்டி வருகின்றனர்.அவதூறு வழக்கு தொடர்பாக, உத்தரப் பிரதேசம் சென்ற ராகுல் காந்தி, தனது ஷூவைத் தைப்ப... மேலும் பார்க்க

பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம்: ரேகா குப்தா!

பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம் என்றும் அது வெற்றிக்கு அப்பாற்பட்டது எனவும் தில்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். சர்வதேச பெண்கள் நாளையொட்டி பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய 7 பெண்கள் தில... மேலும் பார்க்க

பிகார் அரசு பள்ளிகளில் புதிதாக 51,389 ஆசிரியர்கள் நியமனம்!

பிகார் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனத்தின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,389 ஆசிரியர்களுக்கு, முதல்வர் நிதீஷ் குமார் இன்று நியமனக் கட... மேலும் பார்க்க

உ.பி.யில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

உத்தரப் பிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவர் பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் ஹிந்தி பத்திரிகை ஒன்றில் செய்தியாளராகப் பணியாற்றிய ராகவேந்திரா... மேலும் பார்க்க