பெஹல்காம் தாக்குதல் எதிரொலி: ஞானவாபி மசூதியில் பாதுகாப்பு அதிகரிப்பு!
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் சொன்ன அமித்ஷா
ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமல் நேற்று பயங்கர தாக்குதல் நடந்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு இணையான மிகப்பெரிய தாக்குதல் இது.
இதுவரை வெளியான தகவலின் படி, இந்தத் தாக்குதலில் 29 பேர் பலியாகி உள்ளனர்.
நேற்று, இந்தத் தாக்குதல் நடந்த ஓரிரு மணிநேரத்திலேயே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சர் உமர் அப்துல்லா, அந்த யூனியன் பிரதேசத்தின் உயர் காவல் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் கலந்துகொண்ட சந்திப்பு ஆன்லைனில் நடந்தது.
இந்த ஆன்லைன் மீட்டிங்கிற்கு பிறகு, அமித்ஷா காஷ்மீருக்கு பயணமானார்.

இன்று இந்தத் தாக்குதலில் பலியானவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார் அமித்ஷா.
"இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாப்பு படையினர் எடுப்பார்கள்" என்று உறுதியளித்த அமித்ஷா, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் குடும்பத்தினருக்கும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
