செய்திகள் :

டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி!

post image

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் சோதனையை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரிய தமிழக அரசின் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் ஈடுபடுவதாகக் கூறி, தகவல் கிடைத்ததையடுத்து, சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6 ஆம் தேதிமுதல் 8 தேதிவரையில் சுமார் 60 மணிநேரம் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனை சட்டவிரோதமானது என்றும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளைத் துன்புறுத்தியதாகவும் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கானது நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்த அமலாக்கத் துறைக்கு அனுமதி இருப்பதாகக் கூறி, வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதுகுறித்து, நீதிமன்றம் கூறியதாவது, கடந்த 2017 முதல் 2024 ஆம் ஆண்டுவரை, பதிவு செய்யப்பட்ட 41 முதல் தகவல் அறிக்கைகள் அடிப்படையில்தான் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்த, அமலாக்கத்துறைக்கு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது அல்ல; அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேச நலனுக்கானதுதான். நள்ளிரவு சோதனையின்போது, ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதையும் ஏற்க முடியாது.

அதுமட்டுமின்றி, டாஸ்மாக் நிறுவனத்தின் பெண் அதிகாரிகள், ஊழியர்களைக் கேடயமாகப் பயன்படுத்தி, அமலாக்கத்துறை விசாரணையை மாநில அரசு தடுக்க முயற்சிக்கிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் ஏற்காது. தங்களின் தனிப்பட்ட உரிமைகள் பாதிக்கப்பட்டிருந்தால், தனிப்பட்ட அதிகாரிகள் வழக்கு தாக்கல் செய்யலாம்.

அமலாக்கத் துறையின் சோதனைக்கு எதிராக தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் ஏன் வழக்கு தாக்கல் செய்தன? அமலாக்கத்துறையின் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோ என்ற கேள்வியும் எழுகிறது என்று தெரிவித்தனர்.

இதையும் படிக்க:சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆள்மாறாட்டம் மூலம் 5.3 மில்லியன் டாலர் வருவாய்!

ஏப். 25 முதல் கோடை விடுமுறை! ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் ஏப். 25 முதல் கோடை விடுமுறை தொடங்கி ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவ... மேலும் பார்க்க

அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும்: அண்ணாமலை என்ன சொல்கிறார்!

பெஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நமது தலைவர்கள் அரசியல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்திலிருந்து பெங்களூரு வழியாக... மேலும் பார்க்க

அமித் ஷா பதவி விலக வேண்டும்: தொல். திருமாவளவன்

பெஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பெஹல்காமில் உள்ள பைச... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்னிந்... மேலும் பார்க்க

ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? - உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற... மேலும் பார்க்க

புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்: முதல்வர்

புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.உலக புத்தக நாளையொட்டி முதல்வர் ஸ்டாலினின் தன்னுடைய எக்ஸ் தளப... மேலும் பார்க்க