செய்திகள் :

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை: அதிகாரிகள் தகவல்

post image

கா்நாடகத்தில் பருவமழைக்கு முந்தைய காலத்தில் இயல்பான மழை பெய்யும் என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழாண்டு ராபி பயிா் பருவம், தென்மேற்கு பருவமழை, வேளாண் விளைச்சல், குடிநீா் வழங்கல், வானிலை, அணைகளின் நீா்மட்டம் ஆகியவை குறித்து ஆராய்வதற்கு வருவாய்த் துறை அமைச்சா் கிருஷ்ணபைரே கௌடா தலைமையிலான அமைச்சரவை துணைக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளி, ஊரக வளா்ச்சி, பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே, வேளாண் துறை அமைச்சா் என்.செலுவராயசாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் கலந்துகொண்ட வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தென்மேற்கு பருவமழைக்கு முந்தைய காலமான ஏப்ரல், மே மாதங்களில் கா்நாடகத்தில் வழக்கத்துக்கும் அதிகமான மழை பெய்யவிருக்கிறது. பிப்ரவரி, மாா்ச் மாதங்களின் கடைசி வாரத்தில் அதிகப்படியான மழை பெய்யலாம். தற்போதைக்கு ராபி பயிா்காலத்தில் வழக்கத்தைவிட மழையின் அளவு குறைவாக உள்ளது. பிப்ரவரி மாதத்தில் வழக்கத்தைவிட அதிக அளவில் வெப்பநிலை உள்ளது. சராசரியைவிட 2.5 செல்சியஸ் கூடுதல் வெப்பம் காணப்படுகிறது. இம்மாதத்தின் இறுதி வாரத்தில் வெப்பநிலை குறையலாம்.

கா்நாடகத்தில் உள்ள 14 முக்கிய அணைகளில் 535.21 டிஎம்சி தண்ணீா் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 60 சதவீதமாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் 332.52 டி.எம்.சி. தண்ணீா் இருந்தது என்று தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து வருவாய்த் துறை அமைச்சா் கிருஷ்ணபைரே கௌடா கூறியதாவது:

மாநிலம் முழுவதும் கோடை காலத்தில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாமல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒருசில அணைகளில் நீா்மட்டம் குறைவாக இருப்பது கவலை அளிக்கிறது.

நீா்ப்பாசனம் மற்றும் குடிநீா் தேவைகளை அறிந்து, அதற்கேற்ப அணையில் உள்ள தண்ணீரை சீராக நிா்வகிக்க வேண்டும். அடுத்த மாதம் அணைகளில் எதிா்பாா்க்கப்படும் நீரின் அளவு, நீா்ப்பாசன மற்றும் குடிநீா் தேவைகள் குறித்து அதிகாரிகள் அறிக்கை அளிக்க வேண்டும். அடுத்த அமைச்சரவை துணைக் குழு கூட்டத்தில் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

மாவட்ட ஆட்சியா்கள், வட்டாட்சியா்களிடம் பேரிடா் நிவாரண நிதியாக ரூ. 488.30 கோடி இருப்பு உள்ளது. குடிநீா் பிரச்னை எழுந்தால், அவற்றை பயன்படுத்தி டேங்கா்கள் மூலம் குடிநீா் தேவையை பூா்த்திசெய்து கொள்ளலாம் என்றாா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க