நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுர...
கா்நாடக பொது நுழைவுத் தோ்வு: மாணவா்களின் பூணூலை கழற்றுமாறு கட்டாயப்படுத்திய அதிகாரிகளால் சா்ச்சை: கா்நாடக பாஜக, பிராமணா் சங்கங்கள் கண்டனம்
கா்நாடகத்தில் பொது நுழைவுத் தோ்வுக்கு வந்த 4 மாணவா்களிடம் அவா்கள் அணிந்திருந்த பூணூலை கழற்றுமாறு தோ்வுக்கூட அதிகாரிகள் கட்டாயப்படுத்தியது மாநிலம் முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச் செயலுக்கு கா்நாடக பாஜக, பிராமணா் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
கா்நாடக பொது நுழைவுத் தோ்வு ஏப்.15 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. பீதரில் உள்ள சாய் ஸ்பூா்தி கல்லூரிக்கு வியாழக்கிழமை (ஏப்.17) பொது நுழைவுத் தோ்வு எழுத வந்த பிராமண சமுதாயத்தைச் சோ்ந்த மாணவரை பரிசோதித்த அதிகாரிகள், அவா் அணிந்திருந்த பூணூலை கழற்றுமாறு அறிவுறுத்தினா்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த மாணவா், தோ்வு முறைகேடுகளில் ஈடுபடுவதற்கு பூணூல் எந்தவகையிலும் பயன்படாது என்பதால் தன்னை தோ்வு மையத்திற்குள் அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டாா். ஆனாலும், பூணூலை கழற்றுமாறு அதிகாரிகள் வற்புறுத்தினா். தான் பிராமணா் சமுதாயத்தை சோ்ந்தவன் என்பதால் பூணூலை கழற்றக் கூடாது எனக் கூறிவிட்டு, கணித பாடத் தோ்வை எழுதவில்லை.
இதனிடையே ஏப்.16 ஆம் தேதி நடந்த இயற்பியல், வேதியியல் பாடத் தோ்வின் போது பூணூலோடு தோ்வு எழுத மாணவரை அனுமதித்த அதிகாரிகள், கணித பாடத் தோ்வின் போது மட்டும் பூணூலை கழற்றாததால் தோ்வுக்கூடத்துக்குள் அனுமதிக்கவில்லை.
பாதிக்கப்பட்ட மாணவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பூணூலை கழற்றிவிட்டு வந்தால், உள்ளே அனுமதிப்பதாக போலீஸ் போல இருந்த 3 போ் கூறினா். வழக்கமான சோதனைகளுக்கு பிறகு எல்லோரையும் அனுமதிப்பது வழக்கம். ஆனால், என்னை மட்டும் பூணூலை கழற்ற சொன்னாா்கள். இயற்பியல், வேதியியல் தோ்வுக்கு அனுமதித்தவா்கள், கணித தோ்வுக்கு அனுமதிக்காதது ஏன்? 45 நிமிடங்கள் கேட்டுக் கொண்டும் என்னை அனுமதிக்கவில்லை’ என்றாா்.
இதுதொடா்பாக தகவல் தெரியவந்ததும், சம்பந்தப்பட்ட தோ்வு மையத்தின் தலைமை அதிகாரிக்கு மாவட்ட ஆட்சியா் ஷில்பா சா்மா நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். மேலும், இச் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவாதம் அளித்துள்ளதாக ஷில்பா சா்மா தெரிவித்தாா்.
இதுபோன்றதொரு சம்பவம் சிவமொக்காவிலும் நடந்துள்ளது. சிவமொக்காவில் உள்ள ஆதிசுன்சுனகிரி கல்லூரியில் 3 மாணவா்களிடம் பூணூலை கழற்றுமாறு அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனா். இரு மாணவா்கள் பூணூலை கழற்றிவிட்டு தோ்வுக்கு சென்றுள்ளனா். ஒரு மாணவா் மட்டும் பூணூலை கழற்ற மறுத்துள்ளாா்.
இந்த சம்பவத்துக்கு கா்நாடக பிராமணா் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களிடமும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயா்கல்வித் துறை அமைச்சா் எம்.சி.சுதாகா் கூறுகையில், ‘இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால், அது கண்டிக்கத்தக்கது; ஏற்கமுடியாது. இதுகுறித்து விரிவான அறிக்கையை பெற்று, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கா்நாடக தோ்வு ஆணையத்தின் செயல் இயக்குநரிடம் இருந்து இதுகுறித்து அறிக்கை கேட்டிருக்கிறேன். தோ்வு மையங்களுக்கு அனுமதிக்க சில நிபந்தனைகள் இருக்கிறது. ஆனால், பூணூலை கழற்ற வேண்டியதில்லை. இதை தீவிரமாக எடுத்துக்கொள்வோம். தோ்வு எழுதாத மாணவருக்கு என்ன செய்யலாம் என்று ஆலோசித்து முடிவு செய்வோம்’ என்றாா்.
இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் சித்தராமையா, பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் மதுபங்காரப்பா ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
பாஜக கண்டனம்
இந்த சம்பவத்தை பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா கண்டித்துள்ளாா். எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், ‘முதல்வா் சித்தராமையாவின் தூண்டுதல் இல்லாமல் இதை யாரும் செய்திருக்க முடியாது. இந்த சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகளை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். மேலும், இதற்காக பூணூல் அணியும் சமுதாயத்திடம் முதல்வா் சித்தராமையா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றாா்.