செய்திகள் :

சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!

post image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராகுல் திரிபாதிக்கு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே சென்னை அணிக்காக தமது முதல் ஐபிஎல் ஆட்டத்தில் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்த வலது கை ஆட்டக்காரரான ஆயுஷ் மாத்ரே மாற்று வீரராக சென்னை அணியில் புதிய வரவாக சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் ருதுராஜ் கெய்க்வட்க்கு பதிலாக ஆயுஷ் மாத்ரே அணியில் இணைந்துள்ளார்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் பேட்டிங்கில் மிரட்டிய ஆயுஷ் மாத்ரே, 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணியில் நன்றாக விளையாடி ரன்களை திரட்டி கவனத்தை ஈர்த்தவர். இந்தநிலையில், அவர் மீதான மிகுந்த நம்பிக்கையால் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அவரை தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் ஆட்டங்களில் பெரிதாக சோபிக்காத திரிபாதி மீது சென்னை அணி நம்பிக்கையை இழந்ததன் காரணமாகவே, மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான இன்றைய ஆட்டத்தில் ஆயுஷ் மாத்ரேவுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஐபிஎல்: சென்னையைப் பந்தாடிய மும்பை! 16 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது!

மும்பை: வான்கடேவில் மும்பை இந்தியன்ஸின் ஆதிக்கம் இன்றைய ஆட்டத்திலும் நீடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 177 ரன்கள் இலக்கை 16 ஓவர்களில் எட்டி வெற்றியை ருசித்தது. ஏற்கெனவே 5 ஆட்டங்களில் தோல்விய... மேலும் பார்க்க

ஜடேஜா, துபே, ஆயுஷ் மாத்ரே அதிரடி! மும்பைக்கு 177 ரன்கள் இலக்கு

மும்பை: ஐபிஎல் 38-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற 177 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வான்கடே திடலில் எதிர்கொண்ட சென்னை சூப்பர் கி... மேலும் பார்க்க

சிஎஸ்கேவுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்துவீச்சு!

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று(ஏப். 20) நடைபெறும் 38-ஆவது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது. வான்கடே திடலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹார... மேலும் பார்க்க

ஐபிஎல்: பஞ்சாப் கிங்ஸ் பரிதாபம்! பெங்களூரு அணி அபார வெற்றி!

சண்டீகர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று(ஏப். 20) நடைபெற்ற 37-ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்சிபி) அணி வெற்றியை ருசித்தது.டாஸ் வென... மேலும் பார்க்க

பேட்டிங்கில் சொதப்பிய பஞ்சாப்: ஆர்சிபி வெற்றிபெற 158 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் 2025-இன் 37-ஆவது போட்டியில் முல்லன்பூர் திடலில் நடைபெறும் போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்... மேலும் பார்க்க

ஆர்சிபி பந்துவீச்சு: அணியில் லிவிங்ஸ்டன் நீக்கம்!

ஐபிஎல் 2025-இன் 37-ஆவது போட்டியில் முல்லன்பூர் திடலில் நடைபெறும் போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர... மேலும் பார்க்க