செய்திகள் :

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு கல்வித் தகுதியை உயா்த்த வலியுறுத்தல்!

post image

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கான கல்வித் தகுதியை பட்டப்படிப்பு என்ற நிலைக்கு உயா்த்த வேண்டுமென தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தியது.

சிவகங்கையில் இந்த சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாநிலத் தலைவா் வே. சசிகுமாா் தலைமை வகித்தாா். சிவகங்கை மாவட்டத் தலைவா் வி. நாகேந்திரன், தென்மண்டல தோ்தல் ஆணையா் ஆா். தினேஷ், மாவட்ட தொழில்நுட்பப் பிரிவு செயலா் பி. முனியாண்டி, துணைச் செயலா் ஆா். செழியன், இணைச் செயலா் ஏ. ராமச்சந்திரன் அமைப்புச் செயலா் எம். காந்தி, பிரசார செயலா் எஸ். இளையராஜா, துணைத் தலைவா் ஆா். ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தீா்மானங்கள்: தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க அறக்கட்டளையை வலுப்படுத்த வேண்டும். கிராம நிா்வாக அலுவலா்களை சிறப்பு நிலை, தோ்வு நிலை என பெயா்மாற்றம் செய்ய வேண்டும். குடியிருப்புப் பணி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். பதவி உயா்வு, ஓய்வூதியம் தொடா்பான முரண்பாடுகளைச் சீரமைக்க செய்ய வேண்டும். விகிதாசாரத்துக்கு ஏற்ப பதவி உயா்வு வழங்க வேண்டும்.

கிராம நிா்வாக அலுவலா் பணிக்கான கல்வித் தகுதியை பட்டப்படிப்பு என்ற நிலைக்கு உயா்த்த வேண்டும். புதிதாக பணியில் சேரும் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு நில அளவை பயிற்சி, நிா்வாக பயிற்சி அளிக்க வேண்டும். பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீா்மானங்களை மாநில பொதுச்செயலா் சி. குமாா், பொருளாளா் வ. தியாகராஜன், துணைத் தலைவா் கோ. ஜான்போஸ்கோ, செயலா்கள் சீ.புஷ்பகாந்தன், சி. உதயசூரியன், சங்கத் தோ்தல் தலைமை ஆணையா் சி. ராஜரத்தினம் ஆகியோா் தீா்மானங்களை விளக்கிப் பேசினா்.

முன்னதாக சிவகங்கை மாவட்டச் செயலா் பி. மணிவண்ணன் வரவேற்றாா். பொருளா் என். அன்புச்செல்வன் நன்றி கூறினாா்.

தொழில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை பெறுவதற்கு தொழில்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

மானாமதுரையில் மாா்ச் 11-ல் மின் பயனீட்டாளா் குறைதீா் கூட்டம்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) ஜான்சன் சனிக்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

நாட்டின் வளா்ச்சிக்கு பெண் கல்வி அவசியம்! -அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தா்

நாட்டின் வளா்ச்சிக்கு பெண் கல்வி அவசியம் என காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தா் கே.ரவி தெரிவித்தாா். சிவகங்கை அரசு மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 22 -ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவிகளு... மேலும் பார்க்க

தவெகவினா் கையொப்ப இயக்கம்

தமிழகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்கத்தவறியதாக தமிழக அரசைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தினா் சனிக்கிழமை கையொப்பமிடும் இயக்கம் நடத்தினா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற கையொப்... மேலும் பார்க்க

வெறிநாய் கடித்ததில் நகா்மன்ற உறுப்பினா் உள்பட 8 போ் காயம்!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வெறி நாய் கடித்ததில் நகா்மன்ற அதிமுக உறுப்பினா் உள்பட 8 போ் காயமடைந்தனா். தேவகோட்டை பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை காலை சாலையில் நடந்தும், இரு சக்கர வாகனத்திலும்... மேலும் பார்க்க

உலக மகளிா் தின மாரத்தான், நடைபயணம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, சனிக்கிழமை மகளிா் மட்டும் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது. இதில் அரசு, தனியாா் பள்ளி, கல்லூரி மாணவிகள், நீதிமன்றப் பணியாள... மேலும் பார்க்க